தருமபுரி: நாம் தமிழர் கட்சியின் தலைவர் நாளை தர்மபுரி செல்ல இருக்கிறார். தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியில் இருந்து பல்வேறு முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் பேச்சாளர்கள் அனைவரும் கட்சியை விட்டு விலகி வருகின்றனர். அதிலும் கட்சியின் முக்கிய பிரபலமான பேச்சாளரான காளியம்மன் கட்சி விட்டு விலகியது நாம் தமிழர் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சீமான் மீது பல்வேறு வழக்குகள் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட மண்டல செயலாளர் வழக்கறிஞர் ‘அண்ணாதுரை ‘கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
என்ன காரணத்திற்காக கட்சியை விட்டு விலகுகிறார் என்று விசாரிக்கும் பொழுது இந்தக் கட்சி உருவாவதற்கு முக்கிய காரணம் நம் தமிழர்களை ஈழத்தில் கொன்று குவிக்கும் போது அதை போல் இன்னும் வரும் காலத்தில் செய்யக்கூடாது. என்பதற்காகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும் நாம் தமிழர் கட்சி நிறுவப்பட்டது. மேலும் ஈழத்தில் மூன்று தலைமுறை மக்களை சிங்கள அரசு கொன்று குவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் நமது தமிழின தலைவர் கேப்டன் பிரபாகரனை கொன்றுவிட்டது. தலைவரின் இறப்பிற்கு பின்பு தமிழ் ஈழத்தைப் பற்றி பெரிதும் பேசப்பட்ட தலைவர்கள் சீமான் ஆள் ஈர்க்கப்பட்டு கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டேன்.
மேலும் கட்சியிலிருந்து விலகுவதற்கு காரணம் எந்தவித விருப்பு வெறுப்பும் இல்லாமல் நான் கட்சி விட்டு வெளியேறுகிறேன். சீமான் கட்சியின் தொடர்ந்து என்னால் பயணிக்க முடியாத சில காரணத்தால் நான் கட்சியை விட்டு வெளியேறுகிறேன். கடந்த சில நாட்களாக தர்மபுரி மாவட்டத்தில் ஹட்சன் பால் கம்பெனியில் சுமார் 75 குடும்பங்கள் வேலை இழந்து வறுமையில் வாடும் பொழுது தலைமையிடம் இது குறித்து பிரச்சினைகளை சொல்லும் பொழுது அவர்கள் கண்டுகொள்ளவில்லை. குறிப்பாக தர்மபுரி என்றால் எந்த பிரச்சினைக்கும் குரல் கொடுப்பதும் இல்லை கண்டு கொள்வதும் இல்லை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய 20 மண்டல நிர்வாகிகள் கொடுத்த பட்டியலில் பல காலமாக கிடப்பில் போட்டு வைக்கப்பட்டுள்ளது.
சாதாரண பிரச்சனைகள் எல்லாம் குரல் கொடுக்கும் சீமான் தர்மபுரி பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். இவர் சர்வாதிகாரி போல் விருப்பமுள்ளவர்கள் கட்சியில் இருக்கலாம் விருப்பம் இல்லை என்றால் கட்சி வீட்டில் வெளியேறலாம் என்று சர்வாதிகாரி போல் பேசுகிறார். தர்மபுரி மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வாழ்வை கட்சிக்காக அர்ப்பணித்தனர். மேலும் அவர்கள் அனைவரும் கட்சியை விட்டு விலக அவரே வழிவகை செய்துள்ளார்.
இந்த நிலையில் மாவட்ட செயலாளர்கள் நிதி திரட்ட மட்டுமே அவருக்கு தேவைப்படுகின்றன. மேலும் காளியம்மாளை கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்தபோது தலைமையின் அனுமதி இல்லாமல் யாரையும் அணுக கூடாது என்று காட்டமாக கூறினார். மேலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சர்வாதிகாரி போல நடந்து கொள்வதால் தங்களை அடிமை போல நடத்துகிறார். மேலும் கட்சியில் இருக்க விருப்பம் இல்லாத காரணத்தினால் கட்சியை விட்டு விலகுவதாக தர்மபுரி மண்டல செயலாளர் அண்ணாதுரை அறிவித்தார்..