கோயம்புத்தூர்: தமிழக அரசின் சமூக நல மற்றும் மகளிர் உரிமை துறை மூலம் செயல்பட்டு வரும் மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலி பணியிடங்கள் அறிவித்துள்ளது. கோயம்புத்தூர் பகுதியில் பணிபுரிய தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவரங்கள்:
பணி: மாவட்ட ஒருங்கிணைப்பாளர் –1
தகுதி: வாழ்க்கை அறிவியல் சமூக அறிவியல் மருத்துவம் ஊட்டச்சத்து சுகாதாரம் கிராமப்புற மேலாண்மை சமூகப் பணி மேலாண்மை ஆகிய ஒரு பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றெடுத்தல் வேண்டும். மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ 35000 (மாதம்)
பணி: பாலின சிறப்பு நிபுணர்–1
தகுதி: சமூகப்பணி துறையில் இளம் நிலைப் பட்டம் பெற்று இருப்பதுடன் அனுபவமாக மூன்று ஆண்டுகள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ 21,000 (மாதம்)
பணி: தகவல் தொழில்நுட்ப பணியாளர் மிஷன் சக்தி திட்டம்–1
தகுதி: கம்ப்யூட்டர் துறையில் இளங்கலை பட்டம், அரசு அல்லது அரசு சாரா நிறுவனங்களின் குறைந்தபட்ச மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
வயது: 35 வரை
சம்பளம்: ரூ 20000 (மாதம்)
பணி: பல்நோக்கு உதவியாளர்–1
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: ரூ 12000 (மாதம்)
விண்ணப்பிக்கும் முறை:
கோயம்புத்தூர் https://coimbatore.nic.in என்று இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சல் செய்ய வேண்டும்.
முகவரி: சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், பழைய கட்டிடம், அறை எண் 5, தரை தளம், மாவட்ட ஆட்சியரகம், கோயம்புத்தூர்.
தொலைபேசி எண்: 0422-2305156
கடைசி நாள்: 20.7.2025 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.