சென்னை: நடிகர் ரவி மோகன் விவாகரத்து கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு பதிவு தொடர்ந்தது அனைவருக்கும் தெரிந்ததே. ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தி மற்றும் அவருடைய அம்மா சுஜாதா இருவரும் அவதூறு பரவி வருவதாக குற்றம் சாட்டி வருவதாக மனு ஒன்றை நீதிமன்றத்திற்கு அளித்துள்ளார். அதன் படி இருவரும் சேர்ந்து அவதூறு பரப்பிய சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்ட பதிவுகளை நீக்க வேண்டும் என்று ரவி மோகன் லீகல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆர்த்தியை பிரிவதாக ரவி மோகன் அறிவித்திருந்தார். இது தன்னிச்சையான முடிவு என்று ஆர்த்தி சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ரவி மோகன் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.
சுஜாதா விஜயகுமார் தரப்பில் ரவி மோகன், தன்னை சினிமா தயாரிக்க சொன்னதால் மட்டுமே சினிமா தயாரிக்க நான் தொடங்குகிறேன். அதனால்தான் 100 கோடி கடன் எனக்கு இருக்கிறது என்று கூறினார். சென்ற வாரங்களில் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வந்த போது ஆர்த்தி தரப்பில் 40 லட்சம் ஜீவனாம்சமாக ஒரு மாதத்திற்கு தர வேண்டும் என்றும் கோரிக்கை ஒன்றை வைத்தார். இந்த வழக்கு ஜூன் மாதம் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து ரவி மோகன், ஆர்த்தி மற்றும் சுஜாதா விஜயகுமார் இருவரும் என் மீது அவதூறு பரப்பி வருவதாகவும், அவர்கள் வெளியிட்ட மீடியா பக்கத்திலிருந்து அவற்றை 24 மணி நேரத்திற்குள் நீக்கவும் வேண்டும் என்ற அறிக்கையை வெளியிட்டார். மேலும், அவ்வாறு நீக்கப்படாமல் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் குறிப்பிட்டார். இந்த லீகல் நோட்டீஸை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ரவி மோகன்.