வாய்ச் சொல்லில் மட்டும் தமிழை வளர்க்கும் திமுக அரசு!! குற்றங்களை அடுக்கிய சீமான்!!

திருச்செந்தூரில் குடமுழக்கு விழா தமிழில் நடத்தப்பட வேண்டும் என்று ஒரு அறப்போராட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடப்பரசின் அனுமதி பெற்று முறையாக நடத்தப்பட இருந்தது. போராட்டத்திற்கான அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு முடிவடைய போகும் நிலையில் இந்த இடத்தில் போராட்டம் நடத்தக்கூடாது என்று போலீசாரால்  தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால் கொந்தளித்து எழுந்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், வெறும் வாய் பேச்சில் மட்டும் தமிழை வளர்க்கும் திமுக அரசு என்றபடி தனது வாதங்களை அடுக்கியுள்ளார். நிகழ்ச்சி வேலைகள் எல்லாம் முடிவடையும் நிலையில் அதை ரத்து செய்தது ஏன்? முன்னாடியே அங்கு நிகழ்ச்சி நடத்தலாமா நடத்தக் கூடாதா என்று நடப்பாச்சி புரிபவர்களுக்கு தெரியாதா! வெறும் வாய் பேச்சுக்காக தமிழை வளர்ப்பதாக கூறுகின்றனர் திமுக அரசு.

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் ஜூலை மாதம் குடமுழக்கு விழா நடைபெற உள்ளது. அது தமிழில் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நிலையில் அது அவ்வாறு செய்ய முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பேருக்கென்று அலுவலகங்களில் தமிழ் வளர்க என்று போர்டு வைத்துவிட்டு, தமிழை ஆட்சி மொழியாக இல்லாமல் செய்கின்றது திமுக அரசு.

வெறும் வாய் முழக்கங்கள் ஆக மட்டுமே திமுக அரசு செயல்பட்டு வருகின்றது. ஆறு முறை தேர்தலில் வெற்றி பெற்று, தமிழகத்தை ஆண்டபோதிலும் தமிழ் ஆட்சி மொழியாகவோ, பயன்பாட்டு மொழியாகவோ, பண்பாட்டு மொழியாகவோ, அதிகார மொழியாகவோ மாற்றப்படவில்லை. வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாகட்டும் என்று கூறினால் போதாது. ஆட்சியின் செயல்பாட்டில் சிறிதாவது காட்ட வேண்டும் என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram