பல வங்கி கணக்குகள் இருக்கிறதா!! உடனே இதை கவனிக்கவில்லை என்றால் ரூ.10,000 அபராதம்!!

. Do you have multiple bank accounts? If you don't take care of this immediately, you will be fined Rs. 10,000!!

இன்று பலருடைய பெயர்களில் ஒரு சில வங்கிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் பயன்பாட்டில் இருக்கிறது. இவ்வாறு இருக்கக்கூடிய பல வங்கி கணக்குகளில் முறைகேடான முறையில் பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டால் 10,000 ரூபாய் அபராதம் என இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.

RBI புதிய விதிப்படி

ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருந்தால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மோசடி மற்றும் திருட்டு சம்பவங்கள் போன்றவற்றை தடுப்புவதற்காகவே இது போன்ற புதிய விதியை உருவாக்கி இருப்பதாகவும் ஒருவர் பல வங்கி கணக்குகளை வைத்திருக்கும் பொழுது அனைத்திலும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது என்றும் அவ்வாறு பரிவதனைகளை மேற்கொள்ளப்படாமல் இருக்கக்கூடிய வங்கி கணக்குகளில் முறைகேடான முறையில் பரிவர்த்தனைகள் நடைபெறும் பட்சத்தில் அவர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருக்கக் கூடியவர்கள் தங்களுடைய வங்கி கணக்குகளின் பரிவர்த்தனைகளை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவ்வாறு கவனம் செலுத்தும் பட்சத்தில் இந்தியன் ரிசர்வ் வங்கியின் உடைய இந்த அபராதத்திலிருந்து தப்பிக்க முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது,

ஒருவேளை பல வங்கி கணக்குகளை வைத்திருக்கக் கூடியவர்கள் தங்களுக்கு தேவையற்ற வங்கி கணக்குகளை முடக்கி விடுவதன் மூலம் இந்த அபராதத்திலிருந்து தப்பிக்க முடியும். பொதுவாகவே ஒருவர் தேவையற்ற வங்கி கணக்குகளை வைத்திருக்கிறார் என்றால் நேரடியாக அந்த வங்கிக்கு சென்று தங்களுடைய அக்கவுண்ட்டை க்ளோஸ் செய்யுமாறு லெட்டர் எழுதிக் கொடுத்து தேவையற்ற வங்கி கணக்குகளை முடக்கி விடலாம்.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram