கோவிலில் உடைக்கப்பட்ட தேங்காய் அழுகி இருந்தால் என்ன அர்த்தம் தெரியுமா !! கவலைப்பட தேவையில்லை !! 

கோவிலில் தேங்காய் உடைக்கும் போது அழுகியிருந்தால் அதற்கு வருத்தபடவேண்டாம்.ஏன் என்பதையும் தெரிந்து கொள்வோம்.

 

ரத்னம் வடிவேல் சேகர் என்பவர் கூறிருக்கிறார் : கோவிலில் உடைக்கும் தேங்காய் அழுகினால், பூ இருந்தால் என்ன பொருள் என்றும் எது அபசகுனம் ? பரிகாரம் என்ன என்பதனை நிறைய குரியீடு இருக்கின்றன. அதை வைத்து நல்லது எது கேட்டது எது என்பதனை தெரிந்து கொள்வார்கள். தேங்காய் எப்படி இருந்தால் அதற்கு என்ன பயன் என்று தெரிந்து கொள்வோம்.

 

பொதுவாக நாம் கோவிலுக்குச்சென்றால் முதலில் வாங்குவது அர்ச்சனை பொருட்களான பூ, கற்பூரம், தேங்காய் பழங்கள் போன்றவைதான். அதில் தேங்காய் தவிர மற்ற எல்ல பொருட்களும் மேலிருந்து பார்த்து நல்லதாக வாங்கிட முடியும்.

 

தேங்காய் வாங்கும் போது நன்கு பாத்து வாங்கவேண்டும். தேங்காய் உள்ளுக்குள் எப்படி வேண்டுமாலும் இருக்கும். தேங்காயை பற்றி நன்கு தெரிந்தவர்களுக்கு அது இளந்தேங்காயா அல்லது முற்றிய தேங்கயா என்று பார்த்து வாங்குவார்கள்.

 

தேங்காய் கொப்பரை தேங்கயா இருக்கிறதா அல்லது பூ விழுந்திருக்கிறது இல்லை அழுகி இருக்கிறதா என்று யாருக்கும் தெரியாது. அப்படி பூஜை தேங்காயில் பூ இருந்தாலோ அழுகி இருந்தாலோ அவை அபசகுனம் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

 

சாஸ்திரப்படி எது நல்லது எது அபசகுனம் என விளக்கமாக தெரிந்துகொள்ளுங்கள்.கடவுளுக்கு அர்ச்சனை செய்யும் போது ஏன் தேங்காய் உடைகிறோம்தெரியுமா உங்களுக்கு ?தேங்காயில் உள்ள தலை பகுதில் மூன்று கண்கள் இருக்கும் அது மனிதனின் மும்மலங்காகிய ஆணவம், கண்மம் மற்றும் மாயை ஆகியவற்றை குறிக்கிறது.

 

கோவிலில் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது ஏன் ? :

கோவிலில் தேங்காய் உடைப்பதன் முக்கிய காரணம் என்னுடைய மும்மலங்களையும் உன் முன்னே உடைத்தெறிகிறேன் என்பது பொருள். அதேபோல் அந்த மூன்று கண்களும் லட்சுமி, சிவன், பிரமன் ஆகியோரை குறிப்பதாகவும் கூறுகிறார்கள்.

 

கொப்பரை தேங்காய் உள்ள பலன்கள் :

இறைவனுக்கு உடைக்கும் தேங்காய் முழு கொப்பரையாக இருந்தால் அவை உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நடக்க போகிறது எனவும் குழந்தை பேறுக்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பேரு உண்டாகும் என்றும் பிரிந்திருக்கும் குடும்பங்கள் அல்லது உறவினர்கள் ஒன்று சேரவார்கள் என்றும் அர்த்தம்.

 

பூ விழுந்த தேங்காய் உள்ள பலன்கள் :

இறைவனுக்கு உடைக்கும் தேங்காயில் பூ விழுந்தால் ரோக நாஸ்தி ஏற்படும் என்றும் சில சாஸ்திரங்கள் பொன், பொருள் சேர்க்கையில் ஸ்வர்ண லாபம் உண்டாகும் என்று சொல்கிறார்கள்,அதனால் சாமிக்கு உடைக்கும் தேங்காயில் பூ இருந்தால் நீங்கள் சந்தோஷத்தில் கூட துள்ளி குதித்து விளையாடலாம் .

 

சாமிக்காக உடைக்கும் தேங்காய் அழுகினால் உடனே பயம் ஏற்படும். ஏதோ நடக்க கூடாதது நடக்க போகிறது என்ற பதட்டமும் மனதில் பெரும் குழப்பமும் ஏற்படும். ஆனால் உண்மை என்ன தெரியுமா ?

 

தேங்காய் உடைக்கும் போது அழுகியிருந்தால் நீங்கள் சந்தோசப்படவேண்டும் :

ஏனென்றால் உங்களையும் உங்கள் குடும்பத்தை சுத்தியும் உள்ள தீய சத்திகள், கண் திருஷ்டிகள் நீங்கிவிடும் என்று சொல்லப்படுகிறார்.

 

தேங்காய் உடைக்கும் போது அழுகி இருந்தால் நீங்கள் எந்த காரியத்தை நினைத்து உடைத்தீர்களோ அந்த காரியம் சித்தியடையும் என்று பொருள். அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போவது, கேட்ட கனவுகள் வருவது துர்சகுனங்கள் உடைவது கண் திருஷ்டிகள் ஆகியவை நீங்கும்.

 

இனிமேல் சாமிக்காக உடையும் தேங்காய் அழுகிருந்தால் பயப்படவேண்டாம் சந்தோஷப்படுங்கள்.

மேலும் உங்கள் மனத்தில் உள்ள கவலைகள் நீங்க பரிகாரம் செய்ய வேண்டுமா ?ஒருவேளை நீங்கள் சாமிக்கு உடைக்கும் தேங்காய் அழுக்கிருந்தால் அவை உங்கள் மனம் பதட்டப்பட்டிருந்தால் அதற்கு ஒரு எளிய பரிகாரம் உண்டு.

 

அது என்னவென்றால் நீங்கள் ஏதாவது ஒரு காரியத்தை செய்ய நினைத்தால் அவை நிறைவேறும் என்று தேங்காய் உடைத்து அது அழுகினால் அந்த காரியம் நல்லபடியாக நடக்குமா நடக்காதா என்ற கவலை இருக்கும். அதற்கு அத்தினமே 5 அல்லது 7 நபருக்கு அன்னதானம் செய்துவிட்டு மீண்டும் அதை காரியத்தை நினைத்து மற்றொரு தேங்காயை வாங்கி உடைத்து விடுங்கள். நீங்கள் நினைத்த காரியம் நல்ல படிய நிறைவேறும். தானத்திலும் சிறந்தது அன்னதானம் என குறிப்பிடுகிறார்.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram