2026 தேர்தல் சூடுபிடிக்கும் வகையில் மாநிலங்களவை இட ஒதுக்கீடு அதிமுக ஒதுக்க வேண்டும் என காத்திருக்கிறது தேமுதிக. எதிர்பார்ப்புக்கு அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி சில முடிவு எடுத்துள்ளார். இந்த முடிவுக்கு ஜி.கே.வாசன் மற்றும் அன்புமணி ஆகியோரின் அணுகுமுறையே காரணம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வழக்கறிஞர் வில்சன், சந்திரசேகர், சண்முகம், புதுகை அப்துல்லா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு பதவி காலம் வரும் ஜூலை 24 தேதியுடன் முடிவடைகிறது.
இந்த 6 பேரில் திமுக சார்பில் 4 பேரும், அதிமுக சார்பில் இருவரையும் அனுப்ப முடியும். திமுக சார்பில் மாநிலங்களவை போட்டியாளர்கள் பட்டியல் வெளியாகி விட்ட நிலையில் மநீம கமல்ஹாசன் போட்டியிடுகிறார். மேலும், எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதிமுக தரப்பில் 2 வேட்பாளர்களாக யாரை நிறுத்தலாம் என முடிவு எடுக்க ஆலோசனை கூட்டம் இன்று தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
அதிமுக உறுப்பினர்களுக்கு இடையில் இரண்டு சீட்டுக்கு அடித்து கொண்டிருக்கும் நிலையில் தேமுதிக தங்களுக்கு சீட் கிடைக்குமா? என காத்திருக்கிறது. 2024 இல் கூட்டணி பேச்சு வார்த்தையில் 5 மக்களவை சீட்டும் மற்றும் 1 மாநிலங்களவை சீட்டும் தருவதாக உறுதியளித்துள்ளார் என புதுக்கோட்டையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் கூறியிருந்தார். மேலும், கூறுகையில் ஜிகே வாசன், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் உண்மையாக இருக்கவில்லை. அதனால் தான் பாஜகவுடன் கூட்டணிக்கு சென்றது.
கூட்டணியில் நம்பிக்கை இல்லை என அதிமுக கூறுகிறது எனவும் செய்தியாளரிடம் தெரிவித்தார். ராயபுரம் மனோ, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வழக்கறிஞர் இன்பதுரை, நடிகை விந்தியா, ராஜ் சத்யன் ஆகியோரது பெயர்கள் அடிபட்டாலும் இன்பத்துரைக்கு அதிக வாய்ப்பு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி அதிக ஆர்வத்துடன் செயல் படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.