இப்படி ஒருத்தர் கூட நான் டேட்டிங் பண்ணவே மாட்டேன்!! ஜீவி பிரகாஷ் குறித்து பிரபல நடிகை!!

Famous actress about GVPrakash

தமிழ் திரை உலகில் பிரபலமான இளம் இசை அமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார் இவர் தனது மனைவி சைந்தவியை பிரிய இருப்பதாக பரஸ்பரம் அறிவித்திருக்கும் நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் குடும்பப் பிரச்சனைகளுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நடிகை திவ்யபாரதி வெளிப்படையாக இன்ஸ்டாகிராமில் பதிவுத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரை 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் தேதி கரம் பிடித்தார் பாடகி சைந்தவி மன வாழ்க்கையின் அடையாளமாக இந்த தம்பதிகளுக்கு ஒரு அன்பு மகள் இருக்கிறார் அடுத்தடுத்து ஹிட் படங்களுக்கு இசை என வாழ்ந்து வர யார் கண் பட்டதோ தெரியவில்லை மன இறுக்கம் வந்து விரிசலாகி விவாகரத்தில் போய் நிற்கிறது. யாரும் எதிர்பார்க்காத நிலையில் மட்டுமல்லாமல் அவர்களது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜிவி பிரகாஷ் என்றைக்கு இசையமைப்பதை மாற்றி நடிப்பதை முழு நேரமாக்கினாரோ அன்றே ஆரம்பித்தது புகைச்சல் என்கிறார்கள் ஆரம்பத்தில் உடனடிக்கும் நாயகிகளுடன் டீசன்டாக தோன்றிய ஜீவி திரிஷா இல்லனா நயன்தாரா படத்திற்கு பின்னர் தன்னை ஒரு காதல் மன்னனாக காட்டிக் கொள்ள நாயகிகளுடன் நெருங்கி தர லெவலுக்கு இறங்கி கலக்க ஆரம்பித்தது கலக்கத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

அடுத்தடுத்த படங்களில் நாயகிகளின் நாயகனாக பலம் அந்த ஜீவியின் திருமண வாழ்க்கைக்கு வேட்டுவைத்தது அடியே என்ற திரைப்படம் என்றும் இந்த படத்தின் மூலம் நாயகியான நடிகை திவ்ய பாரதியுடன் முத்த காட்சி காதல் காட்சிகளில் ஜிவி பிரகாஷ் உணர்ச்சிவசப்பட்டு நடித்த சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. ஆனால் தங்களுக்குள் அப்படி காண உறவு எதுவும் இல்லை என்று ஜிவி பிரகாசம் மறுப்பு தெரிவித்து இருந்தனர். நடப்பதற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறி இன்ஸ்டாகிரப் பக்கத்தில் பதிவை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

நடிகை திவ்யபாரதி அந்த பதிவில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு தனிப்பட்ட குடும்ப விஷயத்தில் தன் பெயர் இழுக்கப்பட்டுள்ளது ஜிவி பிரகாஷின் குடும்ப பிரச்சினைகளுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை வெளிப்படையாக சொன்னால் தான் ஒருபோதும் ஒரு நடிகருடன் பேட்டிங் செய்யமாட்டேன் நிச்சயமாக ஒரு திருமணமான ஆனுடன் டேட்டிங் செய்யவே மாட்டேன் என்று குறிப்பிட்டிருக்கிறார் ஆதரவற்ற வதந்திகள் என் கவனத்தை ஈர்க்கத் தேவையில்லை என்று நம்பி நான் இதுவரை அமைதியாக  இருந்தேன்.

ஆதரவற்ற குற்றச்சாட்டுக்களால் என் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன் நான் ஒரு வலிமையான சுதந்திரமான பெண் நான் வதந்திகளால் வரையறுக்கப்பட மாட்டேன் என்று குறிப்பிட்டிருக்கிறார் எதிர்ப்பறையை பரப்புவதற்கு பதிலாக ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவோம் எனது எல்லைகளை மதிக்கவும் இந்த விஷயத்தில் இது எனது முதல் மற்றும் இறுதி அறிக்கை என்றும் நன்றி என்றும் தெரிவித்திருந்தார் நடிகை திவ்ய பாரதி.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram