தொடை அழகி என்று ரசிகர்களால் புகழப்படுபவர் நடிகை ரம்பா. உழவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி அதன் பின் பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
இவருடைய ஆரம்ப காலத்தில் இவர் நடித்து ஹிட்டான திரைப்படம் தான் நினைத்தேன் வந்தாய். இந்த திரைப்படம் ஆனது முதலில் தெலுங்கில் இயக்கப்பட்ட வெளியாகி அதன் பின்பு தான் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது. முதலில் தெலுங்கில் எடுக்க நினைத்த நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தில் நடிகை ரம்பா அவர்களுக்கு மெயின் ரோல் கொடுத்து புக் செய்திருக்கின்றனர்.
பொதுவாகவே நடிகை ரம்பாவை திரையில் காட்ட வேண்டும் என்றால் அவருடைய உதடு மூக்கு கண்கள் என ஒன்றொன்றாக காட்டி அதன் பின்பு தான் இவர் ரொம்ப என்பதை முழுமையாக காட்டுவது வழக்கம். அதேபோன்றுதான் தெலுங்கு சினிமாவிலும் ஆனால் அங்கு ரம்பாவை தெரியாதவர் யாரும் இல்லை என்ற காரணத்தால் இத்திரைப்படத்தின் முக்கிய ரோலில் இருந்து ரம்பாவை நீக்கி வேற ஏதாவது ஒரு சிறிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க கேட்டுள்ளனர்.
இதற்கு கோபமடைந்த நடிகை ரம்பா முதலில் முக்கிய கதாபாத்திரத்திற்கு ஒப்புதல் வாங்கிவிட்டு அதன் பின்பு இப்படி சொல்வது சரி அல்ல என பட குழுவிடம் சண்டை பிடித்திருக்கிறார். அதிலும் தன்னால் திரைப்படத்தில் வேறு ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க முடியாது என திட்டவட்டமாக மறுக்கவும் செய்திருக்கிறார். அதன் பின்பு தான் தமிழில் நினைத்தேன் வந்தாய் என்ற தலைப்பில் இந்த திரைப்படம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.