புதுடெல்லி: இந்தியாவின் 1975ல் பிரதமராக இருந்த இந்திரா காந்தி நாடு முழுவதும் ஜூன் 25ஆம் தேதி அவசர நிலையை அமல்படுத்தினார். அவசர நிலையில் இருண்ட காலமாக பார்க்கப்பட்ட போது பேச்சு கருத்து சுதந்திரம் நெருக்கடியை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சியினர் பல பேரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். பத்திரிகை ஊடகங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. அவசர நிலையை அமல்படுத்தியதால் எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர். இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நீடித்த அவசரநிலை உடன் இந்திரா காந்தியின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
காங்கிரஸ் ஆட்சி முடிவில் பாஜக ஆட்சி அமைத்தது. இந்த அவசர நிலையை 1977 மார்ச் 21ஆம் தேதி திரும்ப பெறப்பட்டது. கடந்த 25 ஆம் தேதியுடன் 50 ஆண்டுகள் அவசர நிலையை அமல்படுத்தி நிறைவடைகிறது. பாஜக இளைஞரணி சார்பில் நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்பட்ட 50 ஆண்டுகள் நிறைவடைந்தது தொடர்பாக டெல்லியில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அவசர நிலை காலத்தின் போது விவாதமின்றி நாடாளுமன்றத்தில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. மேலும் நமது மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டு கைது செய்வது தொடர்பான செய்திகளை எவ்வளவு கேட்டிருப்போம். இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலில் இலங்கை எல்லைக்குள் சில பகுதிகளுக்கு செல்லலாம் என்ற ஒப்பந்தம் இருக்கிறது.
ஆனால் அவசர நிலை அமல்படுத்தும் போது அந்த ஒப்பந்த உரிமைகள் கைப்படப்படுகிறது என்று கூறினார். மேலும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சூழ்நிலையை உருவாக்குகிறது. ஒப்பந்த உரிமைகள் கைவிடப்படுவதின் விளைவுகள் தமிழ்நாட்டில் அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் கூறினார். இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்து சித்ரவதைகளுக்கு ஆளாகின்றன.
மீனவர்களை அச்சுறுத்தும் இலங்கை கடற்படையினர்!! இந்திய மீனவர்கள் கைது!! ஜெய்சங்கர் கருத்து!!
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Categories
Latest Post