பாங்காங்: தாய்லாந்து நாட்டில் முன்னாள் பிரதமராக இருந்தவர் சுசிந்தா கிரப்ரயூன். அவரின் வயது மூப்பு காரணமாக தனது வீட்டில் உயிரிழந்தார். ராணுவத்தில் இருந்து விலகி ஓய்வில் இருந்தது குறிப்பிடத்தக்கது. தாய்லாந்தின் தலை நகரான பாங்காங்கில் 1933 ல் பணியில் இருந்த ராணுவ தளபதிக்கு கடைசி மகனாக பிறந்தவர் சுசிந்தா கிரப்ரயூன்.
தானும் தந்தையை போல ராணுவ அதிகாரியாக பணியாற்ற வேண்டும் என சிறு வயதிலிருந்து தந்தையை பின்பற்றினார். ராணுவ தளபதியை பின்பற்றி 1953ல் தாய்லாந்து ராணுவத்தில் கர்னலாக பதவி ஏற்றார். கர்னலான பிறகு ராணுவத்தில் தன் முயற்சி மற்றும் ஆர்வத்தால் உயரிய பதவிகளை அலங்கரித்தார்.
பின் தந்தையை போல ராணுவ தளபதி ஆகா வேண்டும் என்ற கனவை 1990 ஆம் ஆண்டில் ராணுவ தளபதியாக பதவியேற்று நனவாக்கினார்.
1991 ல் சுசிந்தா தலைமையிலான ராணுவப்படை தாய்லாந்தின் பிரதமராக இருந்த சச்சிசாய் சுன்னவன் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதன் பிறகு தாய்லாந்தின் 19 வது பிரதமராக சுசிந்தா பதவியேற்றார்.
பிரதமராக 2 ஆண்டுகள் பதவி வகித்தார் இவர். பின் சில காரணங்களாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து ராணுவ தளபதி பதவியிலிருந்து விலகி ஓய்வு பெற்றார். இந்நிலையில் 91 வயதான நிலையில் தனது வீட்டில் உயிரிழந்தார். விசாரித்ததில் வயது மூப்பு காரணமாக இறந்தது தெரியவந்தது.