பாட்டிக்கு பாலியல் வீச்சு.. போலீஸ்க்கு கத்தி வீச்சு!! சவுக்கு தோப்பில் நடந்த சம்பவம்!!

Grandmother sexually assaulted, police stabbed

கடலூர் : நாளுக்கு நாள் கொலை கொள்ளை திருட்டு என்ற குற்றங்கள் மற்றும் பெண்களுக்கு பாலியல் ரீதியாக ஏற்படும் பிரச்சனைகள் என ஒவ்வொரு நாளும் இந்த செய்திகள் அதிகமாகிக் கொண்டுதான் வருகிறது. அதில் பல செய்திகள் நமக்கு அதிர்ச்சியை உண்டாக்குகின்றன இப்படியெல்லாம் நடக்குமா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.

அதுபோன்ற ஒரு வினோத சம்பவம் தான் கடலூரில் அரங்கேறி உள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தராசு கிராமத்தை சேர்ந்தவர் என்பது வயது மூதாட்டி மாலை நேரம் அந்த கிராமத்தில் நடைபெற்று சென்று கொண்டிருந்தார் அப்போது அங்கு மது குடித்துக்கொண்டிருந்த நபர் அவரை சவுக்கு தோப்பிற்குள் இழுத்துச் சென்று வாயில் மண்ணை போட்டு அவரது மூக்கு காதில் அணிந்திருந்த நகைகளையும் பறித்துள்ளார்.

பறித்ததோடு மட்டுமல்லாமல் மூதாட்டியிடம் பாலியல் அத்துமீரலில் ஈடுபட்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர் அப்போதுதான் அதே பகுதியில் உள்ள சரவணவேல் என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பண்ருட்டி போலீசார் காடாம்பூலியூர் பகுதிக்கு சென்று சுந்தர வேலை பிடிக்க முற்பட்ட போது அவர் கையில் வைத்திருந்த கத்தியால் காவலர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்பு அவரை காலில் சுட்டு பிடித்த காவல்துறை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram