தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ராஜேஷ் நேற்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். அவர் இறப்பிற்கு சித்த மருத்துவர் தான் காரணம் என்று அவர் தம்பி கண்ணீர் மல்க கதறி அழுதுள்ளார். இவர் தமிழில் மட்டும் இல்லாமல் பல்வேறு மொழிகளில் 45 வருடமாக 180 திரை படங்களில் நடித்துள்ளார் . இவர் கதாநாயகனாக மட்டுமின்றி பல வேடங்களில் நடித்து உள்ளார் குணசித்திர வேடங்களில் வில்லனாகவும் நடித்த இவர் சினிமா துறையில் மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கினார். புத்தக எழுத்தாளர், ஜோதிடம் ,டப்பிங், சீரியல் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய ராஜேஷ் நேற்று காலை இயற்கை எய்தினார்.
சித்த மருத்துவரை நம்பாமல் மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருந்தால் அவர் இன்று உயிருடன் இருந்து இருப்பார் என்று அவர் தம்பி கதறி அழும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. நேற்று காலை முதல் ராஜேஷ் உடல்நல குறைவாக இருந்ததாகவும் இன்று காலை அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் கூறுகிறார் அவர் தம்பி . அவர் விருப்பத்தின்படி சித்த மருத்துவரை அழைத்ததாகவும் சித்த மருத்துவர் இரண்டு மணி நேரம் ஆகியும் அண்ணனுக்கு மருத்துவம் செய்யாமல் அண்ணனிடம் பேசிக்கொண்டு இருந்தார் என்றும் கூறினார் .
அண்ணனின் நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம் என்று கூறினார் .மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அண்ணன் உயிர் பிரிந்தது . சித்த மருத்துவரை அழைக்காமல் முதலிலேயே மருத்து வமனைக்கு அழைத்து சென்று இருந்தால் அண்ணன் இன்று உயிருடன் இருந்திருப்பார் என்று ராஜேஷ் தம்பி இணையத்தில் கதறி அழுந்துளார் . அந்த சித்த மருத்துவர் அண்ணனிடம் சும்மா பேசி கொண்டு இருந்து விட்டார் . அவர் அண்ணனுக்கு மிகவும் தெரிந்தவர் என்பதால் எங்களால் எதுவும் சொல்ல முடியவில்லை .
சினிமா துறையில் பலருக்கு ஆரோக்கிய டிப்ஸ் கொடுத்தார் ராஜேஷ் ஆனால் இன்று அவர் உயிர் உடலை விட்டு பிரிந்தது .
அடுத்த மாதம் தன் மகனுக்கு திருமணம் செய்ய ராஜேஷ் பேசிக்கொண்டு இருந்த நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டது என்று அவர் தம்பி பேசி இருக்கிறார் . மறைந்த நடிகர் ராஜேஷ் க்கு சென்ற வருடம் தான் இருதய ஆப்ரேஷன் செய்தனர்.
ராஜேஷ் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் . அவர் நண்பர்கள் பலரும் ராஜேஷ் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் கொண்டவர் என்றும் ஒரு துளி நீர் கூட வெளியில் பருக மாட்டார் எனவும் தெரிவித்து உள்ளனர் .