மீண்டும் வேகம் எடுக்கும் கனமழை!! வெலின் தாக்கம் குறையுமா? வானிலை நிலவரம்!! 

Heavy rain picking up pace again!!

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி எடுக்கும் நிலையில் தற்போது கனமழை வேகம் எடுக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறுகிறது. அறிவிப்பின்படி, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், காரைக்கால் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் ஆகிய பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்.
ஒரு சில இடங்களில் பலத்தாரைக்காற்றுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரித்துள்ளது. கோயம்புத்தூரில் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் கன மழை மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
நாளை தமிழகத்தின் ஒரு சில இடங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் மலை பகுதிகள் ஆகிய இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஜூன் 27, 28 ஆம் தேதிகளில் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும். குறிப்பாக, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஒரு சில இடங்கள் ஆகிய இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram