ஜூன் 11, 2025: சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீலகிரி மாவட்டத்திற்கு ஜூன் 14 மற்றும் 15 தேதிகளில் அதி கனமழை காரணமாக “ரெட் அலர்ட்” அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய (ஜூன் 11) தினம் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும், மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்கள்:
நீலகிரி,கோவை,திண்டுக்கல், தேனி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு.
ஆகிய இடங்களில் இன்று கனமழை பெய்ய உள்ளதால் பொதுமக்கள் இன்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நாளை (ஜூன் 12) கனமழை நிலவரம்:
மிக கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்கள்:
நீலகிரி, கோவை (மலைப்பகுதிகள்)
இந்த இரண்டு மாவட்டங்களில் கன மழை பெய்ய உள்ளதால் அதற்கு ஏற்றவாறு உங்கள் வேலைகளை நிர்ணயித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்கள்:
திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி
ஜூன் 14 மற்றும் 15 — ரெட் அலர்ட் நிலவரம்:
ஜூன் 14:
நீலகிரி (ரெட் அலர்ட்), கோவை (மலைப்பகுதிகள்), தேனி, தென்காசி, கன்னியாகுமரி
ஜூன் 15: மிக கனமழை:
கோவை (மலைப்பகுதிகள்), தென்காசி, திருநெல்வேலி (மலைப்பகுதிகள்), கன்னியாகுமரி
மிகக் கனமழை பெய்ய கூடிய மாவட்டங்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
கனமழை:
திருப்பூர் திண்டுக்கல், தேனி.
ஜூன் 16: மிக கனமழை:
நீலகிரி, கோவை (மலைப்பகுதிகள்).
கனமழை:
திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி (மலைப்பகுதிகள்), கன்னியாகுமரி.
மலைப்பகுதிகளில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு போன்ற பிரச்னைகள் ஏற்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதிகாரிகள் மற்றும் மீட்பு படைகள் முன்னேற்பாடு நடவடிக்கைகள் எடுக்குமாறு வானிலை மையம் வலியுறுத்தியுள்ளது.