ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு!! கரையோர மக்கள் பாதுகாப்பு எச்சரிக்கை!!

சமீப காலமாக மழை நன்கு பொழிவதால் ஆறுகளில் எல்லாம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. மேலும் ஆற்றோரம் தங்கி இருக்கும் மக்களுக்கு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களை வேறு இடங்களுக்கு சென்று தங்குமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது. தற்சமயம் ஒகேனக்கலில் நீர் வரத்து 45 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பார்வையாளர்களை அருகில் நின்று பார்ப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எந்த நேரம் நீரின் வரத்து அதிகரிக்கலாம் என்பதால் அங்கு பாதுகாப்பு அம்சங்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் நீரின் அடர்த்தி காரணமாக வெள்ளப்பெருக்கு அதிகமாக காணப்படுகிறது. இதனால் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகளில் குளிக்கவோ, படகு சவாரி செய்வதற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்று படுகையில் தங்கி இருக்கும் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஏதேனும் பேரிடர் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நீர் வரத்து அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு குளிப்பதற்கோ, அருகே நின்று பார்வையிடுவோ செய்ய வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. படகு சவாரியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அங்கு ஆள் நடமாற்றமற்ற சூழல் காணப்படுகிறது. இருப்பினும் பொதுமக்கள் கரையோரம் இருப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசாரால கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram