கொக்கைன் போதைப்பொருள் குறித்து சமீப காலமாக பல விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் தமிழகத்தில் பிடிபட்ட போதை பொருள் வழக்கு சம்பந்தமாக நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சப்ளையர் கெவினும் அதிமுக முன்னாள் பிரமுகர் பிரசாதம் கைது செய்யப்பட்டு போலீஸாரால் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த கொக்கைன் யூசேஜால் உடம்பில் என்னென்ன மாற்றம் நடக்கும் என்று நரம்பியல் டாக்டர் ஒருவர் எடுத்துரைத்துள்ளார்.
மூளை புத்துணர்ச்சி பெற்று தனது இயல்பு வாழ்க்கையை நடத்துவது இயல்பான விஷயம். மூளை ஒரு அழகிய உறுப்பு. இயல்பாகவே நல்ல விஷயங்கள் செய்வதன் மூலம் மூளை புத்துணர்ச்சி பெற்று அதன் மூலம் இன்பம் மகிழ்ச்சி போன்ற சுரப்பிகள் சுரக்கும். இது நார்மல் ஆகவே நம்முடைய செயலின் மூலம் ஏற்படும் ஒரு உணர்ச்சி சம்பந்தப்பட்டது. ஆனால் கொக்கைன் போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதனால் ஏற்படும் இன்பமானது அது ஒரு உடலில் உள்ள வேதியல் மாற்றத்தையே அபஃக்ட் செய்கிறது. இது நேரடியாக மூளை டிரான்ஸ்மீட்டர் என்று சொல்லப்படும் டோபோமயனை அஃபெக்ட் செய்கிறது. இயல்பாகவே மனித மூளையானது ஒரு டிரான்ஸ்லேட்டர் சந்தோசமாக இருக்கிறோம் என்பதை சொல்லி அது இயல்புக்கு திரும்பும். ஆனால் இதன் பயன்பாட்டினால் அந்த இன்பம் என்கின்ற நரம்புக்குள் செயல்படும் டிரான்ஸ்லேட்டர் தடை செய்யப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் இன்பமாக உணர்கிறார்கள். ஆனால் இது இயல்பாக நல்ல விஷயங்களை செய்யும்போது உடலுக்கு எந்த ஒரு தீங்கும் விளைவிக்காமல் நடக்கும். வைரக்கல்லை யாராவது தூக்கி போட்டு கல்லை தூக்கி சுமப்பார்களா என்று அவர் போதை பொருள் உபயோகிப்பதால் ஏற்படும் வேதியியல் மாற்றத்தை விளக்கியுள்ளார்.