பளபளப்பான முகம் வேண்டுமா?? வீட்டில் உள்ள பொருட்களை வைத்து முகப்பொலிவை பெறுவது எப்படி??

How to get a glowy face using household items

வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிமையாக முறையில் முகம் பொலிவைக் கொண்டு வரலாம்.

அன்றாடம் வீட்டில் பயன்படுத்தும்,

*கற்றாழை ஜெல்

*தயிர்

* தேன்

*எலுமிச்சை சாறு

* அரிசி நீர்

*-பாதம் எண்ணெய்

*குங்குமப்பூ போன்றவற்றை பயன்படுத்தி முகப்பொலிவை காணலாம்.

கற்றாழை ஜெல்:

சாருமத்தை மென்மையாக்கி ஈரப்பதம் கொடுக்கிறது. இது வைட்டமின் சி உள்ளது. நல்ல முகத்தை பளபளப்பாக கொண்டு பயன்படுகிறது.

தயிர் ஓட்ஸ் :

தயிர் மற்றும் ஓட்ஸ் பொடியை கலந்து முகத்தில் தடவுவதால் முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி சருமத்தை பொலிவுடன் காட்டுகிறது.

எலுமிச்சை சாறு :

எலுமிச்சை சாறு சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை முற்றிலும் அகற்றி முகத்தை பொலிவுடன் காட்டுகிறது எலுமிச்சை சாறுடன் சிறிதளவு தேன் கலந்து பயன்படுத்தலாம்

அரிசி நீர் :

அன்றாடம் சமைக்க பயன்படுத்தும் அரிசி நீரை வீணாக கீழே கொட்டாமல் அதனை முகத்தில் தடவினால் சருமம் பளபளப்பாகும். எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு அரிசி நீரில் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவலாம். இதனால் என்னை முகத்தில் வடிவது குறையும் முகம் பொலிவாக காணப்படும்.

பாதாம் எண்ணெய் :

பாதாம் எண்ணெய் வைத்து முகத்தில் மசாஜ் செய்யலாம் இதனால் சருமம் மென்மையாகவும் பொலிவுடன் காணப்படும்.இது கண்ணுக்கு கீழ் காணப்படும் கருவளையம் குறைக்கவும் உதவுகிறது.

மஞ்சள் :

மஞ்சள் சருமத்தை மிகவும் பொலிவுடன் காட்டக்கூடிய ஒன்று சருமத்தை பொலிவாக வைக்க வீட்டில் காணப்படும் சில பொருட்களை பயன்படுத்தலாம் *தினமும் முகத்தை சுத்தமான நன்னீரில் கழுவ வேண்டும்.

*அதிக நேரம் வெளியே வெயிலில் சுற்றுவதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

*அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

*தேவையான நேரம் தூக்கத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

*மன அழுத்தத்தை முற்றிலும் குறைக்க வேண்டும். இவ்வாறு எளிமையான வழிகளில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து முகத்தை பொலிவுடன் வைத்துக் கொள்ளலாம்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram