IBPS பொதுத்துறை வங்கிகளில் வேலை!! 10,277 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு!!

IBPS Jobs in Public Sector Banks

சென்னை: இந்திய வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS), நாட்டின் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 10,277 எழுத்தர் (Clerk) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பட்டதாரிகளுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு என கருதப்படுகிறது.

முக்கிய விவரங்கள்

பணியின் பெயர்: கிளர்க் (Customer Service Associate)

மொத்த காலியிடங்கள்: 10,277

விண்ணப்ப தேதி: ஆகஸ்ட் 1, 2025 முதல் ஆகஸ்ட் 21, 2025 வரை

தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வு (Prelims) மற்றும் முதன்மைத் தேர்வு (Mains) ஆகிய இரண்டு கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். நேர்முகத் தேர்வு கிடையாது.

கல்வி மற்றும் வயது தகுதி

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் மாநிலத்தின்/ யூனியன் பிரதேசத்தின் அதிகாரப்பூர்வ மொழியில் பேசுவதற்கும், எழுதுவதற்கும், படிப்பதற்கும் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: ஆகஸ்ட் 1, 2025 தேதியின்படி, 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு மற்றும் விண்ணப்ப செயல்முறை

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ₹850, SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ₹175.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஐபிபிஎஸ்-ன் அதிகாரபூர்வ இணையதளமான www.ibps.in க்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கு முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து அறிந்து கொள்வது அவசியம்.

தேர்வு தேதிகள்:

    • முதல்நிலைத் தேர்வு: அக்டோபர் 2025
    • முதன்மைத் தேர்வு: நவம்பர் 2025

குறிப்பு: தமிழகத்தில் மட்டும் சுமார் 894 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வேலைவாய்ப்பு குறித்த மேலும் விரிவான தகவல்களை ஐபிபிஎஸ்-ன் இணையதளத்தில் காணலாம்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram