10 லட்சம் இருந்தால் நீங்களும் தொழிலதிபராகலாம்! தமிழக அரசின் அடுத்த அப்டேட்!!

You too can become an entrepreneur.

சென்னை:  பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு எத்தனையோ ஊக்கத்தொகைகளை வழங்கி வருகிறது. தமிழக அரசு பெண்கள் சொந்த காலில் நிற்கவும், வாழ்க்கைத் தரத்தில் முன்னேறவும் என  ஏராளமான கடன் உதவிகள் மற்றும் சலுகைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான பெண்கள்  பயன் பெற்று வருகிறார்கள்.

பெண்கள் சுயமாக தொழில் தொடங்க முனைவோருக்கான கடனுதவி வழங்கும் விதமாக சில திட்டங்களை அமலுக்கு கொண்டு வர தயாராகி வருகிறது தமிழக அரசு. திட்டங்களினால் பெண்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என நம்பிக்கை தெரிவிக்கிறது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் புதிதாக குழு கடன் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இதில், அதிகபட்சமாக 1.25 லட்சம் கடன் உதவி வழங்கப்படுகிறது.

மேம்பாட்டு கழக சார்பாக ரூ .15 லட்சம் வரை கடன் பெறுவதற்கு வயது வரும்போது 18 முதல் 60 வயது வரை இருத்தல் வேண்டும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் பெண்கள் தொழில் தொடங்க முனைவோருக்கு தலா 10 லட்சம் வரை கடன் உதவி வழங்க அரசாணை வெளியிடப் போவதாக கூறப்படுகிறது. அதன்படி சிறு, குறு, நடுத்தர தொழில் துறை செயல்படுத்த போவதாக தகவல்கள்  தெரிவிக்கின்றன. ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் பெண்களை தொழில் முனைவோராக்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

திட்டத்தில் வருடத்திற்கு 20 ஆயிரம் பேர் என ஐந்து ஆண்டுகள் ஒரு லட்சம் தொழிலதிபர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் 20% அரசு மானியம் வழங்க பட்ஜெட்டில் 225 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்குரிய அனுமதி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது அனுமதி கிடைத்தால் விரைவில் வந்தடையும் எனவும் சிறு தொழில் துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram