உடலில் ஏதேனும் சிறு மாற்றம் வழக்கத்திற்கு மாறாக உண்டானால் கூட சாதாரணமாக நினைக்காமல் அது என்னவென்று உடனடியாக பார்ப்பது மிகவும் நல்லது. மிகப்பெரிய பிரச்சனைகளுக்கு பின்னால் உடலில் சிறு மாற்றங்களின் மூலம்தான் வெளிப்படும். அந்த வகையில் தற்போது வரை புற்றுநோய் பாதிப்பால் பலரும் உயிரிழந்து வருகின்றனர்.
இதை முழுமையாக நிவர்த்தி செய்யும் வகையில் தற்போது வரை எந்த ஒரு மருந்து மாத்திரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேபோல புற்றுநோய் காரணிகளில் மிகவும் பாதிக்கப்படுவது ஆண்கள் தான். அதிலும் குறிப்பாக இந்த சிறுநீரகப் புற்று நோயால் வயது முதிர்ந்தவர்கள் பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர். இதனை ஆரம்ப கட்டத்திலேயே சிறு அறிகுறிகள் கொண்டு எளிமையாக கண்டறியலாம்.
சிறுநீரகப் புற்றுநோயை கண்டறிவது எப்படி??
சிறுநீரகப் புற்றுநோய் ஒருவருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றால் கழுத்தில் வீக்கம் அதிகரிக்கும்.
நமது உடலில் உண்டாகும் புற்றுநோய் செல்களானது கழுத்தில் நரம்புகளில் பரவும் பட்சத்தில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் எளிமையாக கண்டறியலாம். இதனை தவிர்த்து கழுத்துகளில் கட்டி போன்று ஏதாவது தென்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
அதேபோல கழுத்து மட்டும் இன்றி சிறுநீரில் ரத்த கசிவு ஏற்படுவது அதில் கட்டி தேவையற்ற உடல் எடை இழப்பு பசியின்மை அணிமியா போன்ற பல காரணங்கள் அடுக்கடுக்காக கூறுகின்றனர். இதில் ஏதேனும் உங்களுக்கு அறிகுறி இருக்கும் பட்சத்தில் அதனை அசாதாரணமாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.


