பிரெஸ்சல்ஸ்: பயங்கரவாதம் பாகிஸ்தானில் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்திற்கு இந்தியா பதிலடி கொடுக்கத் தயங்காது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இந்தியாவின் கொள்கையை உறுதிப்படுத்தும் வகையில் இருதரப்பு உறவுகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் நாடுகளுக்கு பயணம் சென்றுள்ளார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்.
இந்த அரசு முறை பயணமானது 7 நாட்களுக்கு நீடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. பெல்ஜியமில் பிரெஸ்சல்ஸ் சென்ற போது செய்தியாளர்களை சந்திக்கும் நேர்காணல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேர்காணல் நிகழ்ச்சியின் போது பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடு மற்றும் பஹல்காம் தாக்குதல் மற்றும் இந்திய அளித்த பதிலடி குறித்து பல்வேறு தரப்பில் கேள்விகள் கேட்கப்பட்டன.
கேள்விகளுக்கு பதில் அளித்த ஜெய்சங்கர் கூறியதாவது, பயங்கரவாதத்தை ஒரு கருவியாக பயன்படுத்துவது பாகிஸ்தான். அதே இப்போது முழு பிரச்சனையாக மாறி உள்ளது. பாகிஸ்தானில் பயங்கரவாதம் எந்த இடத்தில் ஊடுருவி இருந்தாலும் அந்த இடத்தில் இந்தியா பதிலடி கொடுக்கத் தயங்காது. மேலும், மே 10ஆம் தேதி நடத்த இருந்தது ஒரே ஒரு காரணத்தினால் நிறுத்தப்பட்டது.
அன்றைய நாளில் 8 பாகிஸ்தானிய விமான நிலையங்களை தாக்கினோம். நம்பவில்லை என்றால் கூகுளில் கிடைக்கும் படங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட ஓடு பாதைகளை காணலாம். திறந்தவெளியில் பாகிஸ்தானின் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் பயிற்சி அளித்தது அண்டை நாட்டின் கட்டவிழ்த்து விடுகிறது.
மேலும், ஏப்ரல் மாதம் நடத்திய தாக்குதல் தொடர்ந்தால் பாகிஸ்தானின் நிலைமை என்னவாக இருக்கும் என்று ஜெய்சங்கர் கூறினார். இந்த சம்பவங்கள் திரும்பத் திரும்ப நடந்தால் எங்களின் மிகப்பெரிய தாக்குதலாக பார்க்கப்படும். பாகிஸ்தான் மிகவும் மோசமான நிலையை அடைந்துவிடும்.