இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு!! பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

இந்திய ரயில்வே புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இனி ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பே இறுதி பயணிகள் பட்டியல் வெளியாகும்.

தற்போது, பயணிகளின் முன்பதிவு மற்றும் காத்திருப்பு பட்டியல் நிலையை உறுதிப்படுத்தும் இறுதி பட்டியல் ரயில்வே நிர்வாகம் ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்புதான் வெளியிடுகிறது. இதனால் பயணிகள் கடைசி நிமிடம் காத்திருப்பில் இருந்து உறுதிப்படுத்துதல் கிடைத்ததா என்ற குழப்பத்தில் சிக்கிக்கொள்ள நேரிடுகிறது. இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டால், பயணிகள் தங்கள் முன்பதிவு நிலையை ரயில்வே இணையதளத்திலும், ஆப் மூலமும், ஸ்டேஷனில் டிஸ்பிளே போர்டிலும் 24 மணி நேரத்திற்கு முன்பே அறிந்து கொள்ள முடியும். காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்கள் மாற்று பயண திட்டங்களை சீராக திட்டமிடும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் இறுதி நேர பரபரப்பு குறையும்.

இப்போதைய நடைமுறைகள்:
முதல் இறுதி பட்டியல் ரயில்வே நிர்வாகம் புறப்படும் நிலையத்திலிருந்து 4 மணி நேரத்திற்கு முன்பே உருவாக்குகிறது.
இரண்டாவது பட்டியல் (கடைசி நிமிட பட்டியல்) ரயில் புறப்படும் 30 நிமிடங்களுக்கு முன்பே தயாரிக்கப்படுகிறது.

புதிய நடைமுறைகள்:
புறப்படும் நேரத்திற்கு 24 மணி நேரம் முன்பே ஒரு இறுதி பட்டியல் வெளியாகும். நேரடி டிஜிட்டல் அமைப்புகள் மூலம் ரத்துச்செய்தல்/மாற்றங்களை விரைவில் கையாள முடியும். SMS/Email மூலம் பயணிகள் நிச்சயமாக்கப்பட்ட இருக்கை அறிவிப்பு பெற முடியும். இந்த திட்டத்தை இந்திய ரயில்வே தற்போது தேர்ந்தெடுத்த சில பாதைகளில் பைலட் திட்டமாக இயக்கி பரிசோதித்து வருகிறது. பயணிகள் தரவு ஒத்தி வைப்பு மற்றும் டிக்கெட் சரிபார்ப்பு போன்ற தொழில்நுட்ப சவால்களை எளிதாகக் கையாள முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இது வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டால், பயணிகளுக்கு பயணத்தை நிம்மதியாகவும், திட்டமிட்டதாகவும் மாற்றும் புதிய கட்டமைப்பாக இருக்கும்.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram