Wasingdon: வாஷிங்டன் நாட்டில் டொமினிகன் குடியரசிற்கு சுற்றுலா சென்ற இந்திய வம்சாவளி மாணவி சுதிக்ஷாவை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்திய வம்சாவளி மாணவி சுபிக்ஷா கோணாங்கி இவரது வயது 20. இவர் அமெரிக்காவில் உள்ள பிட்ஸ் பர்க் பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளார். மேலும் விடுமுறை நாட்களில் அவர்கள் நண்பர்களுடன் வாஷிங்டனில் உள்ள டொமினிகன் குடியரசிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு புண்டா கானாவில் ரெப்யூளிக்கா என்ற ஹோட்டலில் தங்கி உள்ளனர். மேலும் இவர்கள் அங்குள்ள கடற்கரையில் நீச்சல் உடை அணிந்து குளிக்க சென்ற போது மர்மமான முறையில் காணாமல் போய் உள்ளார்..
இதைத் தொடர்ந்து மாணவி காணாமல் போனதை அறிந்த காவல்துறையினர் டோமினிகன் காவல் அதிகாரிகள் சுதிஷா கோணாங்கியை தேடி வருகின்றனர். மேலும் அவர்களுடன் சென்ற மாணவர்களை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றன. அவர்கள் அளித்த பதில் கடைசியாக கடற்கரைக்கு தான் சென்றார் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளனர் அதனால் கடற்கரை சுற்றி தேடுதல் பணி தீவிரமாக முடக்கிவிடப்படுகிறது..
சுபிக்ஷா தந்தை கூறியதாவது இதுவரை டோமினிகன் ஹெலிகாப்டர் மற்றும் ஓட்டு உதவியுடன் கடலுக்கு அடியிலும் தேடுதல் பணி செய்து கொண்டு வருகின்றனர். மேலும் அங்குள்ள புதர்கள் மரங்கள் மற்றும் அருகில் உள்ள ஹோட்டல்கள் அனைத்தும் தேடியும் கிடைக்கவில்லை.
மேலும் சுபிக்ஷா கோணாங்கி பற்றி அவர் தந்தை கூறியதாவது. எனது மகள் மிகவும் நல்லவர் அவர் மருத்துவத் துறையில் நன்றாக படித்து வந்தார். அவள் மார்ச் ஆறாம் தேதி காலை 4 மணிக்கு நண்பர்களுடன் ரிசார்ட்டில் இருந்து கடற்கரைக்கு சென்றபோதுதான் காணாமல் போய் உள்ளார். அவள் தோழிகள் அனைவரும் திரும்பி வந்துள்ளதால் எனது மக்கள் மட்டும் காணாமல் போய்விட்டார். எப்படியாவது எனது மகளை மீட்டு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.




