முதல் விண்வெளி பயணத்திற்கு தயாராகும் இந்திய வீரர்!! யார் தெரியுமா!!

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆய்விற்காக சுனிதா வில்லியம்சை தொடர்ந்து தற்சமயம் சுபான்ஷு சுல்கா என்கின்ற இந்திய வீரர் நாளை பயணிக்க உள்ளார். கடந்த விண்வெளி பயணத்தின் போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸ் இணைந்த குழு சில மாதங்கள் விண்வெளியிலேயே கழிக்க நேரிட்டது. அதன் பிறகு அவர்கள் பூமிக்கு பாதுகாப்பாக திரும்ப பட்டிருந்தனர். நாசா( அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் ) மற்றும் இஸ்ரோ ( இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்) இணைந்து ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ் 4 என்ற திட்டத்தை தீட்டி உள்ளது. இத்திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி பயணத்திற்கு நால்வர் அடங்கிய குழு ஒன்றை நாளை, ஜூன் 10 விண்வெளிக்கு அனுப்ப உள்ளது.

அவர்கள் ஜூன் 11 இரவு விண்வெளி மையத்தை அடைவார்கள். நம் இந்திய வீரரோடு அமெரிக்கா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சார்ந்த வீரர்கள் குழுவாக அனுப்பப்பட உள்ளனர். இந்த குழு சர்வதேச விண்வெளி மையத்தில் இரண்டு வாரங்கள் தங்கி இருந்து ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளனர். இவர்கள் அமெரிக்காவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலமாக செல்ல உள்ளனர். இவர்கள் இன்று இறுதி ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து விண்வெளி மைய ஆராய்ச்சிக்கு செல்லும் இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது. இவர் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று தனது மகிழ்ச்சி நிறைந்த தருணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram