இந்தியாவின் விமான போக்குவரத்து வரலாற்றில் மறக்கமுடியாத நாளாக மாறியது. அகமதாபாத்திலிருந்து புறப்பட்டு லண்டன் கேட்விக்குக்குச் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் (AI 171) மதியம் பயங்கரமான விபத்துக்குள்ளாகி, அதில் இருந்த 242 பேரும் உயிரிழந்தனர்.
விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, இது உயரத்தை பெற முடியாமல் தவித்தது. மதியம் 1.38 மணிக்கு, அகமதாபாத் நகரம் அருகிலுள்ள மருத்துவக் கல்லூரி விடுதியின் மீது மோதியபோது, விமானம் ஒரு நெருப்புப் பந்தாக வெடித்து விட்டது. விமானத்தினை இயக்கியவர் கேப்டன் சுமீத் சபர்வால், 8,200 மணிநேர விமான இயக்க அனுபவம் கொண்டவர். அவருடன் முதல் அதிகாரி கிளைவ் குந்தர், 1,100 மணிநேர பறக்கும் அனுபவம் பெற்றவர். விமானம் புறப்பட்ட 6 நிமிடங்களில் விமானி ஒரு Mayday (அவசர) அழைப்பு அனுப்பினார். விமானம் சுமார் 825 அடி உயரத்தில் இருந்தபோது, அதன் மேல் உயரம் பெற முடியாமல் தவித்தது.
விமான இயக்கத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு, அல்லது பறக்கும் பொழுது ஏற்பட்ட இயந்திரப் பழுது என்று சந்தேகம் எழுகிறது. விமானம் அகமதாபாத் மருத்துவக் கல்லூரி விடுதியின் மேல் பகுதியைக் கடுமையாக தாக்கியது. அதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர்.
உயிரிழந்தோர் விவரம்:
இந்தியா 169, பிரிட்டன் 53, கனடா 1, போர்த்துகீசியர் 7 மொத்தம் 242 பேர்.
இவர்கள் பலர் மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் என பல்வேறு துறையினரும், பல கனவுகளை கொண்டவர்களாக இருந்தனர். இந்தப் பேரழிவுக்குப் பின்னால் இருக்கும் காரணங்களை ஆராய DGCA (Directorate General of Civil Aviation), ஏர் இந்தியா மற்றும் பிளேக் பாக்ஸ் தரவுகள் மேல் விசாரணை மேற்கொள்கின்றன.
விமானம் புறப்பட்ட நேரம், மெக்கானிக்கல் நிலைகள், விமானியின் அழைப்புகள் ஆகிய அனைத்தும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.