BANGLADESH: வங்கதேசத்தில் இடைக்கால அரசாங்கம் வீழ்த்தப்பட்ட ராணுவ தளபதி கைப்பற்ற போவதாக வெளியான தகவலுக்கு முகமது யூனுஸ் பதில் அளித்துள்ளார்.
வங்கதேசத்தின் தற்போதைய இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக உள்ள முகமது யூனுஸ் நம் நாட்டுடன் மோதல் போக்கு கடைபிடித்து வரும் நிலையில் ராணுவ அதிகாரிகள் அவசரமீட்டில் நடத்திய பின் பல தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அவர் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நம் நாட்டின் அண்டை நாடான வங்கதேசத்தின் பிரதமராக ஷேக் அசினா இருந்தார் கடந்தாண்டு நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்து நம் நாட்டின் தஞ்சமடைந்தார்.
அதன்பின் இடைக்கால அரசாங்கம் முகமது யூனுஸ் தலைமையில் நடைபெற்று வருகிறது அவர் நமது நாட்டுடனே மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார் அது மட்டுமல்லாமல் அவரின் செயல்பாடு மக்களிடையே வரவேற்பை பெறவில்லை மேலும் ராணுவ தளபதியான வாக்கர் உஸ் ஜமால் தற்போது சமீபத்தில் அவசர மீட்டிங் ஒன்று நடத்தினார்.
இந்த மீட்டிங்கில் இடைக்கால அரசாங்கம் தவிர்க்கப்பட்டு ராணுவாச்சி கையில் எடுக்க உள்ளதாக தகவல்கள் பரவின இதுகுறித்து முகமது யூனுஸ் கூறுகையில், தற்போது வதந்திகளின் திருவிழா தான் நடைபெற்று வருகிறது அதனால் பல வதந்திகள் பரவி வருகிறது ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் இது போன்ற வதந்திகள் திருவிழா நடக்கிறது போல் தெரிகிறது.
தேர்தல் நெருங்குவதால் இது போன்ற தவறான தகவல்கள் தீவிரமாகிக் கொண்டே வருகிறது இதற்கு பின்னால் யார் என்ன செய்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும் இவை அனைத்தும் வதந்திகள்தான் நாங்கள் தற்போது ஐநா சபையின் ஒத்துழைப்பை நாடி இருக்கிறோம். அவர்கள் ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்துள்ளார்கள் என இது குறித்து அவர் பதில் அளித்துள்ளார்.