ஆடி அம்மனுக்கு அர்ப்பணித்த மாதமா?? சுப நிகழ்ச்சிகளுக்கு தடை ஏன்??

ஆடி மாதம் வந்துவிட்டால் சுப நிகழ்ச்சிகள்  அனைத்தையும் நிறுத்திவிட்டு அடுத்த மாதத்தில் தான் செய்வார்கள். ஆனால் இதன் பின்னணி தெரியுமா? பண்டைய காலத்தில் இருந்து தொடர்ந்து பரம்பரையாக கடைபிடிக்கப்படும் ஒரு மரபு இது. ஆடி மாதம் முழுக்க பூமாதேவி அம்பிகையாக அவதரித்த காலம் என்று நம்பப்படுகிறது. பார்வதியின் தவத்தைத் திருப்திப்படுத்திய பரமசிவன், ஆடியை அம்மன் மாதமாக அறிவித்தார். அதனால்தான் இந்த மாதம் முழுக்க அம்பாளுக்கு பூஜைகள், ஹோமங்கள், திருவிழாக்கள் களைக்கட்டும்.

தை முதல் ஆனி வரை உத்தராயணம், இது தேவர்களுக்கு பகல். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயணம், இது அவர்களின் இரவு. அதில் ஆடி தான் மாலை நேர ஆரம்பம். அதனால் அதிக ஆன்மீக செயல்கள், விரதங்கள், புண்ய நாட்கள் அடர்ந்திருக்கின்றன. பெண்கள் ஆடி செவ்வாய்களில் விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பலம் அதிகரிக்கும் என்பர். ஆடி வெள்ளியில் வரலட்சுமி விரதம் பரிசுத்தமானதாகக் கொண்டாடப்படும்.

ஆடி ஞாயிறு திருவிழாக்கள், காவடி, பால்குடம், தீமிதிப்பு என்று கோயில்களில் பக்தர்கள் புண்ணியம் தேடி போவார்கள். ஆடி மாதத்தில் திருமணம், மாப்பிள்ளை பார்க்கும் காரியம் போன்றவை ஏன் தவிர்க்கிறோம்? முன்னோர்கள் சிந்தித்தது எளிமையான காரணம்  இந்த மாதம் முழுக்க ஆன்மீகத்தில் மனதை கட்டுப்படுத்த வேண்டும். கோயில்களில் திருவிழாக்கள், விரதங்கள் தொடர்ச்சியாக இருக்கும் போது மனமும், நேரமும் அதற்கே செல்கிறது. அதில் குடும்ப சுப நிகழ்ச்சிகள் இடையூறாக இருப்பதைத் தவிர்க்க இப்படி மரபு ஒன்று உருவானது. மற்றும், ஆடி மாதத்தில் திருமணம் நடைபெற்றால் குழந்தை சித்திரையில் பிறக்கும்.

அதுவே கொடிய வெயில், வேதனை அதிகம், தாய்க்கும் பிள்ளைக்கும் சிரமம் என்பதால் அந்த காலத்தில் மருத்துவ வசதிகள் இல்லாத நிலையில் திருமணத்தைத் தவிர்த்து வைத்தனர். சிலர் தவிர்க்க முடியாமல் சுப காரியங்களை செய்ய வேண்டி வந்தால், அம்மன் ஆலயத்தில் பூஜை செய்து அம்பிகையை வணங்கி ஆசீர்வாதம் பெறலாம். குடும்பத்துடன் விரதம் இருந்து சிறப்பு பூஜை செய்து பின் நிகழ்ச்சி நடத்தலாம் என்பதே பரிகாரம். ஆடி மாதம் என்றாலே சுப காரியங்களை தவிர்த்து ஆன்மீக விழிப்புடன் வாழ்வதே பரிசுத்தம்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram