சமீபமாக கோலிவுட் வட்டாரங்களில் செம்ம ஹாட் டாப்பிக் ஆகி விட்டது ரவி மோகன் மற்றும் பின்னணி பாடகி கெனிஷாவின் நட்பு. நடிகை ஆர்த்தியுடன் விவாகரத்து விவகாரம் ஒரு பக்கம் இருக்க, திருமண நிகழ்ச்சிகளில் ரவி-கெனிஷா ஜோடியாகக் கலந்துகொண்டது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரவி-கெனிஷா இருவரும் குன்றக்குடி கோயிலில் தரிசனம் செய்தபோது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
குறிப்பாக, இருவரும் மாலை அணிந்தபடி ஜோடியாகத் தோன்றியதைப் பார்த்த ரசிகர்கள், ‘இது என்ன கல்யாணம் நிஜமாகச் செஞ்சுட்டாங்களா?’ என்ற வண்ணம் சந்தேகங்கள் எழுப்ப ஆரம்பித்துவிட்டனர். இதே நேரத்தில், ஆர்த்தி சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு, ‘என்னுடைய பெயர் இன்னும் ஆர்த்தி ரவிதான். நீதிமன்றம் முடிவு வரும் வரை, என்னை முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம்’ என்று வலியுறுத்தி இருந்தார். நடிகைகள் ராதிகா, குஷ்பூ உள்ளிட்டோரும் ஆர்த்திக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அதற்கு பதிலாக, ரவி, ‘ஆர்த்தி என் மீது பல கோடி ரூபாய் கடன் சுமை வைத்தார்’ என புகார் கூற, ஆர்த்தியின் அம்மா சுஜாதா அதை முற்றிலும் மறுத்து, ‘ஒரு ரூபாய்கூட நான் ரவியை பொறுப்பேற்க வைக்கவில்லை ஆதாரம் இருந்தால் காட்டட்டும் எனக் கூறினார்
இந்நிலையில், கெனிஷா சமீபத்தில் ‘என் சோல் மெட்டை சந்தித்துவிட்டேன். அவர் என்னை பாதுகாப்பாக உணர வைக்கிறார்’ என பேட்டியில் தெரிவித்ததைத் தொடர்ந்து, இணையதள ரசிகர்கள் ‘இது என்ன டிராமாவா?’ என்று கலாய்க்கத் தொடங்கியுள்ளனர். ரவி மற்றும் கெனிஷா தங்கள் நட்பை ‘ரொமான்ஸ்’ ஆகவே மாற்றுகிறார்களா, அல்லது நண்பர்கள் மட்டுமா என்ற கேள்விக்கு இன்னும் தெளிவான பதில் கிடைக்கவில்லை.
ஆனாலும், கோலிவுட் பத்திரிகைகளுக்கு இது கிடைத்த பெரிய சென்சேஷனாக மாறியுள்ளது. குறிப்பாக, ஆர்த்தி, ‘ஜீவனாம்சம் மாதம் 40 லட்சம் தரவேண்டும்’ என்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ள நிலையில், இந்த விவகாரம் ரவி மோகனின் திரையுலக பயணத்தையும் தாக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ரவி மோகன்-கெனிஷா ஜோடியின் இச்சமாச்சாரம் இன்னும் பல விசாரணைகளுக்குப் பின் தெளிவு ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.