நகை பாலிஷ் ஆக்ட்டிங் !! தென்காசியில் அரங்கேறிய நூதன திருட்டு!! ஆறு பேர் கைது!!

Jewelry Polish Acting! Six arrested!!
தென்காசி: தென்காசி அருகே தங்க நகைகளுக்கு பாலிஷ் போடுவது போல் நடித்து நூதன திரட்டில் ஈடுபட்ட ஆறு வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆலடிப்பட்டியில் கடந்த 21ஆம் தேதி தங்க நகைகளுக்கு பாலிஷ் போடுவதாக கூறி ஆறு இளைஞர்கள் வந்துள்ளனர்.
சக்கர வாகனங்களில் வந்த 6 வடமாநில இளைஞர்கள் சேர்ந்து ஆலடிப்பட்டி திருவள்ளுவர் தெருவை சேர்ந்த ராஜபுஷ்பம் (67 வயது) என்று வயதான பெண்ணிடம் இருந்து 16 கிராம் எடையுள்ள தங்க நகையை வாங்கி உள்ளனர். வெளியே சென்று இருந்த மூதாட்டியின் மகன் இளைஞர்களின் நடவடிக்கைகளில் சந்தேகப்பட்டு தங்க நகையை கேட்டுள்ளார். தங்க நகையை கொடுத்துவிட்டு உடனே சென்று விட்டனர்.
எடை குறைவாக இருந்ததை கவனித்த மூதாட்டியின் மகன் எடை போட்டுப் பார்த்தபோது 2.5 கிராம் குறைவாக இருந்ததால் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு தொடர்ந்ததின்  பேரில் ஆலங்குளம் உட்கோட்ட பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
சிவலார்குளம் விளக்கு அருகில் இரண்டு சக்கர வாகனத்தில் ஆறு வடமாநில இளைஞர்கள் நகைக்கு பாலிஷ் போடுவது போல் ஆசிடில் போட்டு தங்க நகையின் எடையை குறைத்த குற்ற செயலில் ஈடுபட்டனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்படி போலீசார் கைது செய்தனர்.
மேலும், 2.5 கிராம் நகை மற்றும் அவர் இருசக்கர வாகனம் 2 என அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர். வடமாநிலத்தை சேர்ந்த 6 இளைஞர்களையும்  பாளையங்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர்.
Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram