டெல் அவிவ்: ஈரான்-இஸ்ரேல் இடையிலான மோதல் தற்போது அதிகரித்து வருகிறது. டெல் அவிவ் பொருளாதார மையம், நிதியமைச்சகம், tel nof விமான தளம், haifa வின் சில இடங்கள், பாதுகாப்பு அமைச்சகம், இஸ்ரேல் எண்ணெய் எடுக்கும் தளம் போன்ற 6 இடங்களை மட்டுமே குறி வைத்து தாக்குதல் நடத்துவதாக ஈரான் கூறியுள்ளது. இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மிக பெரிய போராக மாற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக யூத நாடான இஸ்லாமிய நாடு காலத்தில் இறங்கியுள்ளது. இஸ்லாமிய நாட்டின் நபிகள் நாயகத்தின் வம்சாவளி என அழைக்கப்படும் ஜோர்டான் இஸ்ரேலை காக்க வந்துள்ளது. அதன்படி இஸ்ரேலை காக்க ஈரான் ஏவிய ஏவுகணைகளை வானிலேயே தடுத்து அளித்து வருகிறது. 100 க்கும் அதிகமான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு நேற்று ஈரான் தாக்கியது. இதன் அடுத்த கட்டமாக நள்ளிரவு முதலே தாக்குதலை தொடங்கியுள்ளது இஸ்ரேல்.
பல ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தினாலும் இஸ்ரேல் அதனை தடுத்து வருகிறது. இன்று காலை 9 மணியிலிருந்து தாக்குதல் நடந்த நிலையில் ஈரானின் ஏராளமான ஏவுகணைகள் சேதமைடைந்தாலும் ஒரு சில ஏவுகணைகள் இலக்கை கொண்டு தாக்கியதில் இஸ்ரேலின் 2 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், 1 உயிரிழந்துள்ளார். 20 பேர் படு காயமடைந்துள்ளதாக என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இஸ்ரேலுக்கு உதவியாக ஜோர்டான் களமிறங்கியுள்ளது.
இஸ்ரேலை ஏவுகணைகள் செல்ல வேண்டுமெனில் ஜோர்டான் வழியாக தான் செல்ல வேண்டும். இதனை பயன்படுத்தி ஜோர்டான் ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருகிறது. அதிகமான இஸ்லாமியர்கள் ஜோர்டானில் இருப்பதால் இது இஸ்லாமிய நாடாக உள்ளது. 1999 ஆம் ஆண்டு முதல் மன்னராக உள்ள அப்துல்லா இந்த தாக்குதலுக்கு தலைமை தாங்குகிறார். இஸ்ரேல்-ஜோர்டான் ஆகிய இரு நாடுகளும் நல்ல நட்புடன் இருந்ததில் இஸ்ரேலுக்கு உதவியாக இருக்கிறது.