நேற்று ஆரம்பித்த பிரச்சினை இன்றும் ஆரம்பமாகியுள்ளது. முத்து ஆரம்பத்திலேயே உங்க அம்மா கிட்ட நீ சொல்லாம ஏன் அவங்க சீதா கல்யாணம் பத்தி என்கிட்ட பேச வராங்க என்று கத்துகிறார். அதற்கு மீனா நான் ஒன்னும் சொல்லல எனக்கு எதுவும் தெரியாது என்று கூற, என்ன ஆச்சு என்ன நடந்தது என்று கேட்க பொய் சொல்லாத மீனா என்று கத்துகிறார். நீதான் உங்க கிட்ட கல்யாண விஷயமா பேச என்கிட்ட அனுப்பி வச்சேன் என்று சொல்ல மீனா உடனே எங்க அப்பா இருந்தால் கண்டிப்பாக சீதாவை அம்மா காதலித்த பையனுடன் கல்யாணம் பண்ணி வச்சிருப்பாரு என்று கூறுகிறார். மாமாவும் மாப்பிள்ளை யாரு என்னன்னு விசாரிச்சுட்டு தான் கல்யாணம் பண்ணி வச்சிருப்பாரு. அவன் ஒன்னும் நல்லவன் கிடையாது. நீ வேணும்னா ஆவி கிட்ட பேசுற ஆள வர சொல்லு நான் மாமா கிட்ட கேட்கிறேன் என்று நக்கல் அடிக்கிறார். மீனாவும் எனக்கு தெரிஞ்ச அக்கா இருக்காங்க உன்கிட்ட சொல்லி வர சொல்றேன் என்று பதிலடி கொடுக்கிறார்.
மற்றொருபுறம் டான்ஸ் கிளாஸிற்கு அருணின் அம்மா, விஜயாவை தேடி வருகிறார். சீதாவும், அருணும் காதலிக்கிறார்கள். உங்க மகன் அவங்க ரெண்டு பேத்துக்கு இடையில உள்ள சண்டையில கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேங்குறாரு. நீங்க கொஞ்சம் பேசுங்களேன் என்று கேட்க விஜயா, உங்க மகனுக்கு எதுவும் கோளாறா! இல்லை இரண்டாவது கல்யாணம் பண்றீங்களா! போயும் போயும் உங்க வீட்டை தவிர்த்து உங்களுக்கு வேற பொண்ணு கிடைக்கலையா! என்று சரமாரியாக கேள்வி எழுப்புகிறார். நீங்க சமாதான பேசுவீங்கன்னு கேட்க வந்தேன் நீங்க என்னன்னா இப்படி பேசுறீங்க என்று கோபித்துக் கொண்டு செல்கிறார் அருணின் அம்மா.
அடுத்த நாள் காலையில் சாமியார் ஒருவர் வீட்டிற்கு வர இவர் மீனா அழைத்து வந்த ஆள்தான் என்று முத்து அவரை உள்ளே வரவழைத்து சாமி ஆவிகளோட பேசி ஆவியை இங்கு வர வைங்க என்று கூறுகிறார். வந்த சாமியார் அவர் கூறுவதை பார்த்து பயந்து, நீ கூறுவதை பார்த்தால் எனக்கே பயமாக உள்ளது என்று ஓட பார்க்கிறார். அவரை இழுத்துப் பிடித்து முத்து ரகளை செய்கிறார். அந்நேரத்தில் விஜயாவும் பார்வதியும் வந்துவிடுகிறார்கள். இவர்தான் மனோஜின் கட்டை பிரிக்க வந்த சாமி என்று விஜயா கூறுகிறார். அவரும் மனதின் கட்டை அவிழ்த்து விட, மனோஜ் அம்மா என்று கூற முடியாது கூறுகிறார். சற்றென்று சாமியார் வாயினில் கற்பூரத்தை கொளுத்தி போடுகிறார். ஆனால் கட்டுப் பிரிக்க சாமியாரை அழைத்தது இந்த சீரியல்தான். புதுசா இருக்கணும் புதுசா இருக்கு.