ஜூன் 11 சிறகடிக்க ஆசை எபிசோடு!! அடித்து நொறுக்கும் அருணும், முத்துவும்!!

கட்டு பிரிக்க வந்த சாமியார் மனோஜின் வாயில் கற்பூரத்தை பொருத்தி போட்டு செல்கிறார். சூட்டினால் அலறி துள்ளி குதிக்கிறார் மனோஜ். அதனால் பேச்சு வராததை கண்டு ரோகிணியும், விஜயாவும் பதறுகின்றனர். முத்து இப்ப என்ன இவனுக்கு பேச்சு வரணுமா என்று ஓங்கி மனோஜின் முதுகில் அடிக்கிறார். அடிவழியில் பேச தொடங்குகிறார் மனோஜ். உடனே முத்து இனிமையாவது தேவை இல்லாம பேசி வாய ஒடச்சிட்டு வராத என்று மெதுவாக கூறுகிறார். விஜயா மனோஜிடம் நீ பேச முடியாதப்போ ரோகிணி சொன்னதெல்லாம் உண்மையா என்று கேட்க, ரோகிணி பீதி அடைகிறார். மனோஜ் வேற வழியின்றி ஆமாமா என்று சொல்லிவிட்டு செல்கிறார். உடனே முத்து, பாரா அவன் எப்படி அவன் பொண்டாட்டிய நேக்கா காப்பாற்றி விட்டான். ஏன்னா அவ பொண்டாட்டி அவ பேச்ச கேக்குறா என்று மீனாவிடம் குத்தி காட்டுகிறார். ரூமினில் உள்ள மனோஜை ரோகிணி பால் எடுத்துக்கொண்டு வந்து பார்க்கிறார்.

ரொம்ப தேங்க்ஸ் மனோஜ் ஆன்ட்டி கிட்ட எதுவும் சொல்லாததற்கு என்று சொல்லிவிட்டு அருகில் அமர்கிறாள். உடனே சட்டென்று விலகிச் செல்கிறார் மனோஜ் அதைக் கண்டு என் மனோஜ் இப்படி செய்கிறாய் என்று கடுப்பாகிறார் ரோகினி. அம்மா சொல்ற வரைக்கும் இதெல்லாம் கிடையாது என்று கூற ரோகிணி நம்ம ரெண்டு பேரும் கணவன் மனைவி இப்ப கூட நீ ஆன்ட்டிப்பேச்சு கேட்டுட்டு இருப்பியா என்று கூறிக்கொண்டே மனதில் இவனை எப்படியாவது மாத்தணும் என்று நினைத்துக் கொள்கிறார். மற்றொரு புறம் சவாரிக்காக முத்து வெயிட் பண்ணிக் கொண்டிருக்க அந்த வழியே அருண் கிராஸ் ஆகி செல்கிறார். உடனே முத்து எங்க போனாலும் இவனை வேற பார்க்க வேண்டியதா இருக்கு என்று புலம்புகிறார். அடுத்த நிமிடமே அங்கு இரண்டு திருடர்கள் ஒரு லேடியின் செயினை அத்துக் கொண்டு செல்கிறார்கள்.

கத்திய லேடின் குரல் கேட்டு முத்து முதலில் ஓடுகிறார். பின்னே அருணும் செல்கிறார். இருவரும் திருடர்களை அடித்து துவம்சம் செய்கின்றனர். அங்கிருந்து தப்பி ஓடி இன்னொரு வீட்டில் திருட முயன்ற போதும், அங்கும் சென்று சண்டை போடுகின்றனர். ஆனால் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. இதனால் அருணுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து அவருக்கு பிரமோஷன் கிடைக்க வாய்ப்பு கிடைக்கிறது.

இதை மகிழ்ச்சியாக ஸ்வீட் பாக்ஸுடன் வந்து தன் அம்மாவிடம் சொல்கிறார். அதற்கு அருளின் அம்மாவோ, நீ சீதாவை மறந்திடு. உனக்காக நான் அவுங்க வீட்ல போய் பேச போனேன். ஆனா உங்க தப்பா பேசுறாங்க. உனக்கு ரெண்டாவது கல்யாணமா என்று கேக்குறாங்க. என் மேல மரியாதை வச்சி இருந்தேன்னா என் பேச்சைக் கேளு என்று கூற அருண் மீண்டும் அப்செட் ஆகிறார். உடனே சீதாவிற்கு கால் செய்து நான் உன்ன உடனே மீட் பண்ணி பேசணும். உங்க குடும்பத்துடனும் பேசணும் என்று கூறி புறப்படுகிறார்.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram