போலீசார் அவரை அழைத்து ஏன் மரியாதை செய்யவில்லை என்று கேட்க, முத்து ஒன்னும் பெரிய உதவி செய்யல என்று சொல்லி மழுப்புகிறார். அந்த வீடியோல அந்த பொண்ணு அவர்தான் காப்பாத்துனாரு என்று செயின் போடுது. நீ என்னன்னா இப்படி சொல்ற. நேர்ல வந்து உன்ன பாத்துக்கிறேன் என்று சொல்லி போனை வைத்து விடுகிறார். அதன் பிறகு சீதா போன் செய்து எங்க மாமா உதவி பண்ணதை நீங்க ஒரு இடத்தில் கூட சொல்லலைங்க! இப்படி கெடச்ச சந்தர்ப்பத்தை வீணாக்கிட்டீங்க என்று சொல்லி அவளும் ஃபோனை வைத்து விடுகிறார். அதைக் கேட்ட அருணின் அம்மா நீ அவர் பெயரை சொல்லாதது தப்பு தானே! இனி உன் கல்யாணம் நடக்கிறது ரொம்பவே கஷ்டம் தான் என்று அவரும் சொல்ல அருண் ஷாக் ஆகிவிடுகிறார்.
மற்றபுரம் கோயிலுக்கு மீனாவை அழைத்து வந்த முத்து, அத்தை சத்யாவை வர சொல்லி மீனாவிடம் செயினை கொடுத்து சீதாவிற்கு போட சொல்கிறார். அதற்கு சந்திரா ஏன் மாப்பிள்ளை மீனா போட்டு அந்த செயின் என்று சொல்ல. இப்போ சீதாக்கு தான் திருமணம் ஆகப்போகுது அவளுக்கு தான் நகை தேவை என்று கூறுகிறார். இதைப் பார்த்து சீதா மனம் மாற செய்கிறார். சரி நான் வேலைக்கு கிளம்புறேன் என்று சொல்லிவிட்டு வெளியே வர அருணை பார்க்கிறார். நீ விவரமான ஆளுல! அந்தப் பொம்பளைய வர வச்சு வீடியோ எடுத்து போட்டுட்ட என்கிறான். சிறிதும் சட்டை செய்யாது நீ எதுக்கு இங்க வந்த கோயிலுக்கு வந்து இருந்தா சரி எங்க வீட்டு பொண்ண பார்க்க வந்திருந்தா, உன்னை எங்கேயும் அசிங்கப்படுத்தவ என்று கூறுகிறார். இதைக் கேட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார் அருண். அதன்பின் சீதா மீனாவிற்கு ஃபோன் செய்து அருண் அவரிடம் பேச விரும்புவதாக கூறுகிறார். மீனாவும் கிளம்பி ரெஸ்டாரன்ட் க்கு போக அருண் எங்க வீட்ல எங்க அம்மாவும் சத்தம் போட்டாங்க.
நான் உங்க ஹஸ்பண்ட் பேரை சொல்லி இருக்கணும். பேர சொல்லாதது என் தப்பு தான் என்று சொல்லிவிட்டு எங்க அம்மா வேற பொண்ணு பாக்குறாங்க. அதனால நாங்க ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு இருக்கோம். நீங்கதான் பண்ணி வைக்கணும் என்று அடுத்த குண்டை தூக்கி போடுகிறார்.