இன்றைய எபிசோடின் தொடக்கத்தில், சிந்தாமணி பர்த்டே பார்ட்டிக்கு எல்லாரும் ஒரே டிரஸ் கோட் அணிய வேண்டும் என்று பார்வதி விஜயாவின் கையில் ஒரு பார்சலை கொடுக்கிறார். அந்த பார்சலை திறந்து பார்த்தால் அதற்குள் பாவாடை தாவணி இருக்கிறது. இத போட்டுட்டு போனா நல்லாவா இருக்கும் என்று விஜயா சங்கடப்பட, பார்வதி நல்லா தான் இருக்கும் போடு என்று சொல்லிவிடுகிறார். ஒருபுறம் அண்ணாமலை, முத்து,ஸ்ருதி, ரவி ஆகியோர் பேசிக்கொண்டு இருக்க, இருவரும் வெளியே பாவாடை தாவணியுடன் வருவதை பார்த்த முத்து அதிர்ச்சியில் உறைகிறான். அவன் அதிர்ச்சி அடைவதை பார்த்து மற்றவர் திரும்பி பார்க்க அவர்களும் வாயடைத்து போகிறார்கள். சமையல் கட்டில் இருந்து காபி கொண்டு வந்த மீனா காபி தட்டை கீழே போட, சத்தம் கேட்டு மனோஜ், ரோகினி வெளியே வந்து பார்க்க அவர்களும் வாயடைச்சு போகிறார்கள்.
எல்லோரும் நீ இப்படி போக போறியா என்று கேட்க ரோகினி மட்டும் வழக்கம்போல் இது உங்களுக்கு நல்லா இருக்காண்டி என்று ஐஸ் வைக்கிறாள். அண்ணாமலை இதை போட்டுட்டா போக போறேன் என்று கேட்க, ஆமாங்க பர்த்டே பங்க்ஷனுக்கு டிரஸ் கோட் இதுதான் என்று விஜயா கூறுகிறாள். அப்பா இவங்கள வேற டிரஸ் போட்டுட்டு போக சொல்லுப்பா என்று முத்து வழக்கம் போல் கிண்டல் அடிக்கிறான். எல்லாரும் உன்னைய தான் பா கேட்பாங்க என்று கூறுகின்றான். விஜயா அந்த டிரஸ் ஓடு புறப்பட்டு சென்று விடுகிறார்.
முத்து நாளைக்கு காலையில நீ அங்கே வீட்டுக்கு வந்துரு. சத்யா நல்ல மார்க் வாங்கி இருக்கான் அதுக்கு நைட்டு டின்னர் அரேஞ்ச் பண்ணி இருக்கேன் என்று கூற, மீனா மனதிற்குள் கல்யாணத்திற்கு செல்ல வேண்டும் என்று குழம்பிக்கொண்டே, எனக்கு காலைல வேலை இருக்குங்க என்று கூறுகிறாள். முத்துவும் ஆமாமா எனக்கும் வேலை இருக்கு நானும் அந்த வேலையை முடிச்சிட்டு அப்படியே வந்துடறேன் நீயும் வந்துரு என்று கூறுகிறார். முத்து காலையில் முருகன் மேரேஜ் விஷயமா ரிஜிஸ்டர் ஆபீஸ் போகணும் என்று கூறுவது போல் காட்சி அமைகின்றது. பர்த்டே பங்க்ஷனுக்கு வந்து பார்த்தால் எல்லோரும் அதே போல் டிரஸ் அணிந்து வந்து இருக்கிறார்கள். பார்வதியின் வரவேற்பு நடனத்துடன் பர்த்டே பங்க்ஷன் தொடங்குகிறது. இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.