ஜூன் 21 சிறடிக்க ஆசை எபிசோட்!! ரோகிணியை வெளுத்து வாங்கும் விஜயா!

எபிசோட் தொடக்கத்தில் சிந்தாமணி இதுதான் என்னுடைய மாஸ்டர். ரொம்ப நல்லா டான்ஸ் ஆடுவாங்க. மாஸ்டர் எனக்காக டான்ஸ் ஆடுங்களேன் என்று கூறுகிறார். விஜயாவும் பயங்கரமாக கிளம்பி வந்து எல்லாரும் சேர்ந்து ஆடுவோம் என்று பாட்டு போட குறுகலமாக எல்லாரும் பார்ட்டியை என்ஜாய் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆடிக்கொண்டிருக்கும்போதே அங்கு வந்த நகைக்கடைக்காரர் பொண்டாட்டி இது என்னோட செயின் என்று விஜயா கழுத்தில் இருக்கும் செயினை அடையாளம் கண்டு கூறுகிறார். செயினின் பின்னால் என்னுடைய பெயர் போட்டு இருக்கும் என்று எடுத்துக்காட்ட விஜய ஷாக் ஆகிறாள். உடனே நான் போலீஸ்க்கு போன் பண்ணி சொல்றேன் என்று போலீஸ்க்கு போன் போட போனை எடுக்கிறாள். சிந்தாமணி உடனே இந்த பிரச்சனையை எனக்காக இதோட விட்டுடலாமே என்று கெஞ்சி விட்டு , ஒருபுறம் விஜயாவிடம் ஒரு மருமக பூ விக்கிறார் இன்னொரு மருமக திருடியா என்று ஏற்றி விடுகிறார்.

மற்றொருபுறம் ரோகிணி, மனோஜுடன் கடைக்கு வந்துள்ளார். அங்கே கிரிஷ் போன் செய்ய தனியே சென்று பேசுகிறார். தான் முதல் மதிப்பெண் எடுத்திருப்பதாகவும் உங்களை பார்க்க ஆசையாக உள்ளது என்று கிரிஸ் வர சொல்லுகிறார் ரோகிணியை. அவளுடைய அம்மாவும் கல்யாணி வந்துட்டு போமா என்று கூற சரி வரேம்மா என்று கூறுகிறார். மனோஜிடம் சென்று பார்லரில் ஒரு வேலை வந்து விட்டது. போயிட்டு வந்துடறேன் என்று கூறுகிறார். மனோஜ் நீ இன்னைக்கு தான் கடைக்கு வந்து இருக்க அதெல்லாம் போகக்கூடாது என்று மறுத்து விட என்ன செய்வது என்று விட்டு விடுகிறார். இருவரும் சேர்ந்து கொடைக்கானல் செல்லலாம் என்று பிளான் செய்து கொண்டிருக்கிறனர். அதற்காக புடவையை அத்தைக்கு வாங்கித் தருவதாக பேசிக் கொள்கிறார். அதற்கடுத்து விஜயா வீட்டுக்கு வந்தவுடன் புடவையை எடுத்துக் கொடுக்கிறார். இதை எங்கிருந்து திருடிட்டு வந்த இன்று அசிங்கப்பட்ட ஆத்திரத்தில் அவரை போட்டு வெளுத்து வாங்குகிறார்.

சத்தம் கேட்டு அனைவரும் வர என்ன ஆச்சு என்று கேட்க நடந்ததை கூறி விஜயா கொதித்து எழுந்து விடுகிறார். எல்லோரும் ஆச்சரியமாக ரோகிணியை பார்க்கிறார்கள். ரோகிணிக்கு சிட்டியிடம் ஏமாந்தது அப்பொழுது தான் தெரிகிறது. அவள் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறாள். கண நிமிடத்தில் அனைவரும் கேள்வி கேட்க, தான் தனக்குத் தெரிந்தவரிடம் ஒரு லட்சம் கொடுத்து அதை வாங்கினேன் என்று கூறுகிறார். ஒரு லட்சத்துக்கு நகை கொடுக்குறாங்கன்னா அது ஏதோ ஒரு சதி இருக்கு தெரியாதா உனக்கு. அண்ணாமலையும் இதெல்லாம் தப்புமா காசு குறைச்சு கொடுக்குறாங்கன்னா அதுல ஏதோ ஒரு தப்பு இருக்குன்னு தான் அர்த்தம் என்று எடுத்துக் கூறுகிறார். முத்து யாரு அது பார்லர் அம்மா. திருட்டு தொழில் செய்றவுங்களோட லாம் உங்களுக்கு பழக்கம் இருக்கா என்று மற்றொரு அதிர்ச்சியை கொடுக்கிறான். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram