நகை வாங்கிய ஒரு லட்சம் ரூபாயை விஜயா கொண்டு வந்து கொடுக்குமாறு ரோகிணி இடம் கூறிவிடுகிறார். அதைத்தொடர்ந்து ரோகிணியும் மனோஜும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கம்போல் மனோஜ் அந்த காசை வாங்கி அம்மாவிடம் கொடுத்து விடு. இல்லையென்றால் நம்மை வாழ விட மாட்டார்கள் என்று ரோகிணியை மேற்கொண்டு பயமுறுத்துகிறான். நானே அந்த காச வேறவுங்கள் கிட்ட வாங்கி தான் கொடுத்தேன். அந்த காசை அவங்க கிட்ட இருந்து எப்படி கேட்க போறேன்னு தெரியல மனோஜ். நீ கூட வரியா என்று உதவிக்கு கூப்பிட, நான் இதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன். நீ வேணும்னா முத்துவ கூட்டிட்டு போ என்று கூறுகிறார். ரோகிணி அதற்கு நானே தனியாக போகிறேன் என்று மறுத்து விடுகிறார்.
மற்றொருபுறம் சீதா அம்மாவிடம் தான் எந்த விஷயத்தையும் சொல்லாமல் செய்ததில்லை என்று மன வருத்தத்தில் மீனாவிற்கு ஃபோன் செய்கிறார். மீனா எனக்கும் இப்படி உன் கல்யாணத்தை பண்ணனும்னு ஆசை கிடையாது. உங்க மாமா தீவிரமாக மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காரு. வேறொருத்தவரோட உன் கல்யாணம் நடந்திட கூடாது என்கிற பயத்துல தான் இப்படி பண்றேன் என்று ஆறுதல் கூறி போனை வைத்து விடுகிறார். அடுத்த நாள் பூமாலையை எடுத்துக்கொண்டு கிளம்ப முத்து சீதாவுக்கும் இப்படிதான் மாலை கட்டணும் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார். சரிங்க நான் போய் டெலிவரி பண்ணிட்டு வரேன் என்று மீனா கிளம்ப நான் வந்து விடவா என்று கேட்கிறார். வேண்டாங்க நானே போகிறேன் என்று சொல்லி மழுப்பி கிளம்பி விடுகிறார். சீதாவும் அருணும் ரிஜிஸ்டர் ஆபீஸ் வந்து விடுகிறனர். அந்நேரம் பார்த்து வித்யாவின் காதலன் முருகன் முத்துவிற்கு ரிஜிஸ்டர் ஆபீஸ் வந்துட்டேன் ப்ரோ என்று கால் செய்கிறான். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.