இன்றைய எபிசொட்டின் தொடக்கத்தில் மீனா சீதா அருண் ஆகியோரை ரிஜிஸ்டர் ஆபீஸ் கூட்டிட்டு வருகிறார். அங்கு அவர்களுக்கு மாலையை மாற்ற சொல்லி ஐயரை வரவழைத்து மந்திரம் சொல்லி திருமணம் செய்து வைக்கிறார். அந்தக் கையோட உள்ளே சென்று ரெஜிஸ்டர் மேரேஜ் செய்யவும் அதற்கு இவர் சாட்சி கையெழுத்து போடவும் செய்கிறார். அதன் பின் முருகன் கல்யாணத்துக்காக ரிஜிஸ்டர் ஆபீஸ் வரும் முத்து போனில் பேசுவதாக திரும்பி நின்னு கொண்டிருக்கிறார். அவரை பார்க்காமல் மூவரும் வெளியே சென்று விடுகின்றனர். அதன்பின் பரிசை உள்ளே வைத்து விட்டேன். எடுத்துவிட்டு வருகிறேன் என்று கூறி உள்ளே சென்று பர்சை எடுத்து திரும்பும் போது முத்து மீனாவை பார்த்து விடுகிறார்.
நீ எங்கே எங்கே என்று கேட்க மீனா அதிர்ச்சி அடைகிறார். கணநிமிடத்தில் அவரே, ஓ காலைல மாலை கொண்டு வரேன்னு சொன்னியே அது இங்க தானா என்று கேட்க, ஆமாம் என்று தலை ஆட்டி விடுகிறார். இவர்கள் இருவரும் இணைந்து வெளியே வருவதை பார்த்த அருண் சீதாவை ஆட்டோவில் அனுப்பி வைத்து விடுகிறான். பின் வண்டியை எடுப்பதற்காக அங்கு வரும்போது முத்துவை நேருக்கு நேராக பார்த்துக் கொள்கிறான். இருவரும் எதிரியை போல் முறைத்துக் கொள்ள மீனா கண்டு மேலும் பயப்படுகிறார். பின்னர் அருண் சென்று விட, முத்து எங்க போனாலும் இவனை வந்து நிக்கிறான் என்று புலம்பி கொண்டு, சரி நீ வீட்டுக்கு போ விருந்து ஏற்பாடு பண்ண நான் வந்துடுறேன் என்று சொல்லுகிறார். மீனாவும் என்ன செய்வது என்று தெரியாமல் கிளம்பி விடுகிறார். மீனாவின் அம்மா வீட்டில் தடபுடலாக முத்து சத்யா நல்ல மதிப்பெண் பெற்றதற்காக விருந்து வைக்கிறார்.
மீனாவின் அம்மா எதற்கு இது மாப்பிள்ளை என்று கேட்க, அத்தை இதெல்லாம் வாழ்க்கைல ஒரு முறை தான் வரும் அப்பயே அனுபவிச்சுக்கணும் என்று சொல்லிவிட்டு வேலையை கவனிக்கிறார். வந்த எல்லாரும் முத்து மாதிரி மாப்பிள்ளை கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் என்று கூறிச் செல்கின்றனர். அங்கு விருந்திற்கு வந்த ஒருவர் முத்துவிடம் எல்லா நல்லா பண்ற. ஆனால் சீதா விஷயத்துல மட்டும் உன் முடிவை மாத்திக்க மாற்றியேப்பா என்று சொல்ல, அருண் அந்த அளவு கெட்டவன் என்று இவனும் பதிலுக்கு சொல்ல, அவர் மறுத்து தொடர்ந்து பேசிக் கொண்டே செல்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த முத்து, சீதா நான் சொல்ற பையனா தான் கல்யாணம் பண்ணிக்குவாள். சீதாவை அழைத்து மாமா சொல்ற பையனா தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று சொல்லு என்று கூற, சீதா எதுவும் சொல்ல முடியாமல் அழத் தொடங்குகிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.