மீனாவின் அம்மா வீடு குடியிருக்கும் ஹவுஸ் ஓனர் இப்ப எல்லாம் பொண்ணுங்க வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிறாங்க என்று சொல்ல யார் எப்படின்னு எனக்கு தெரியாது. ஆனா சீதா நான் சொல்ற பையனா தான் கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்லி அவளை வர சொல்லி சொல்ல சொல்கிறான். சீதாவும் ஒரு புறம் நடந்தது எண்ணி அழுது கொண்டே செல்கிறாள். இதை கவனித்த மீனா முத்துவை இப்ப எதுக்கு இதெல்லாம் பேசிட்டு இருக்கீங்க என்று சத்தம் போட்டு போகச் சொல்லி விடுகிறார். அடுத்ததாக ரோகிணி சிட்டியிடம் சென்று பிரச்சனையை எடுத்துக் கூறி கொடுத்த பணத்தை திரும்ப கேட்கிறார். அதற்கு சித்தி நகையை கொண்டு வா நான் தரேன் என்று சொல்ல, நகை உரியவரிடம் சென்று விட்டது என்று ரோகினி கூற அப்போ எனக்கு ஒரு லட்ச ரூபா நஷ்டம் நான் தர முடியாது என்று சொல்லி விடுகிறான். உன்கிட்ட வந்து கேட்டேன் பாரு அது என் தப்பு என்று கோபித்துக் கொண்டு சென்று விடுகிறாள்.
வெளியில் வந்த ரோகினி முருகனுக்கு கால் செய்து ஒரு லட்ச ரூபாய் கேட்கிறாள். முருகன் வேலை இருப்பதாக சொல்லி கட் செய்து விடுகிறான். இன்னொரு புறம் மீனா சீதா கல்யாண போட்டோவை பார்த்துக் கொண்டே இருக்க முத்து அங்கு வந்து தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கேட்கிறான். உடனே டேபிளில் போனை வைத்துவிட்டு தண்ணீர் எடுக்க உள்ளே சென்று விடுகிறாள். வெளியே வந்து பார்க்கும்போது முத்து அந்த போனை எடுக்க முயல்கிறான். அடுத்தவங்க போன் எல்லாம் பார்க்க கூடாது என்று டவக்கண்ணு பருங்கி விடுகிறாள். தப்பு பண்றவங்க தான் எதையாவது மறைப்பாங்க. நீ ஏன் இப்படி பண்ற என்று கேட்க, அப்போ என் மேல் சந்தேகப்படுறீங்களா என்று அவள் கோவித்து கொண்டு சென்று விடுகிறாள். ஒருபுறம் அருண் கல்யாணமான சந்தோஷத்தில் பாட்டு போட்டுக் கொண்டு படுக்க மற்றொருபுறம் சீதாவும் அருணை நினைத்து வெட்கப்படுகிறாள்.
முத்துவின் வீட்டில் எல்லாரும் படுக்க போக, மீனாவும் முத்துவும் சீதாவின் திருமணம் குறித்து பேசிக் கொண்டிருக்க, மீனா சீதாவை அருணுக்கு கல்யாணம் செய்து வைக்குமாறு கூற கோபம் வந்து இருவரும் சண்டை போட்டு தனித்தனியே படுத்து விடுகிறார்கள். ரோகிணி ஒருபுறம் வந்து கட்டிலில் அமர, மனோஜ் வழக்கம்போல் என்ன இங்க வந்து உட்கார என்று சண்டை இடுகிறான். அம்மா சொல்லி இருக்காங்க காசு கொடுத்த பிறகு தான் கட்டிலில் உட்காரனும்னு என்று சொல்கிறான். உடனே கோபத்தில் ரோகினி ரூமுக்குள் நடப்பதெல்லாம் அவங்களுக்கு எப்படி தெரியும் என்று காத்துக் கொண்டிருக்க எபிசோடு முடிகிறது.