இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் விஜயா தண்ணீர் குடிக்க செல்லும்போது மனோஜ் கீழே உட்கார்ந்து இருப்பதையும், ரோகினி கட்டிலின் மேலே உட்கார்ந்து இருப்பதையும் கண்ட விஜயா கடுப்பாகி மனோஜ் ரூமிற்கு வருகிறார். கோடீஸ்வரி என்று சொன்ன மகாராணி மேல உக்காந்து இருக்கீங்க. என் பையன் கீழே உட்கார்ந்து இருக்கணுமா என்று சொல்லி அடுக்கடுக்காக திட்ட ஆரம்பிக்கிறார். ரோகினி பதில் சொல்ல முற்படும் முன்னரே, மனோஜ் நீ வாடா என் ரூமில் வந்து படு என்று அழைத்துக் கொண்டு சென்று விடுகிறார். ரோகினி அப்படியே உடைந்து போய் அழுகிறார். மற்றொரு புறம் ஸ்ருதி ரவியை ஹோட்டலுக்கு கலர் சூஸ் செய்ய சொல்கிறார். ரவி இதுல எனக்கு இஷ்டம் இல்லை என்று சொல்ல அவர்களுக்குள் மீண்டும் சண்டை எழுகிறது. பின்னர் அமைதியாக இருவரும் பாட்டு கேட்கும் போது, இருவரும் ஒன்றாக செய்ய காட்டுவதன் மூலம் அந்த பிரச்சனை சமாதானம் ஆகிறது.
மற்றொருபுறம் முத்து சீதாவிற்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக மேட்ரிமோனியை நாடுகிறார். அவர் ஃப்ரெண்ட் செல்வம் இதில் எல்லாம் உனக்கு நம்பிக்கை இல்லையேடா என்று சொல்ல சீதாவுக்கு ஒன்னு பாத்து தான் பண்ணனும் என்று சொல்லி கூட்டி செல்கிறார். அங்கு சென்று சீதா பற்றி எடுத்துக் கூற, அவர் இவருக்கு பொருத்தமான ஜாதகம் ஒன்று உள்ளது என்று அருணின் ஜாதகத்தை எடுக்கிறார். அந்த நேரம் பார்த்து அருணின் அம்மா வந்து விடுகிறார். இந்த கல்யாணம் நடக்கவே நடக்காது என்று கத்திக் கொண்டே வெளியே சென்று விடுகிறார் முத்து. ஏன் இப்படி சொல்றது என்று கேட்க, அவங்க வீட்டு பொண்ணு தான் என் பையன் கல்யாணம் பண்ணனும்னு நினைச்சான். ஆனால் என் பையனுக்கும் இவருக்கும் செட்டாகாது. அதனால கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவிக்க மாட்டார் என்று கூறினார். இந்த பக்கம் ஸ்ருதி மீனாவிடம் இப்படி கலர் செலக்ட் பண்ண மாட்டேங்குறாரு என்று எடுத்து சொல்ல மீனா புரிந்து கொண்டு, ரவி சாப்பிட வரும்போது அவரிடம் நைசாக உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும் என்று கேட்டு தெரிந்து கொள்கிறார். அடுத்ததாக விஜயா ரோகினியிடம் எப்போது பணம் தருவாய் என்று மிரட்டுகிறார். அதற்கு அடுத்த வாரத்துக்குள் தருகிறேன் ஆன்ட்டி என்று கூறுகிறார் ரோகிணி. இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.