இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் சீதாவிற்கு திருமணம் செய்ய பார்த்த மாப்பிள்ளை சீதா ஏற்கனவே வேற ஒரு பையன லவ் பண்ணி இருக்காங்க. நான் எப்படி அவங்கள கல்யாணம் பண்ணிக்கிறது என்று கேட்க, கடுப்பாகிறார் முத்து. இந்த சம்மதம் செட் ஆகாது என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். ரோகினி வித்யாவை சந்திக்க வீட்டிற்கு வர, வித்யா வீட்டுக்குள்ள கூட கூப்பிடாமல் வெளியே வைத்தே நீ எப்படி முருகனிடம் காசு கேட்கலாம் என்று கேட்கிறார். நான் உனக்கு போன் பண்ணினேன் லைன் கிடைக்கல. அதனாலதான் நான் முருகனுக்கு கால் பண்ணி கேட்டேன். முன்னாடி பண்ணும் போது மட்டும் லைன் கிடைச்சதா இப்ப கிடைக்கலையா என்று கேட்க, நான் உண்மையிலேயே பண்ணேன் என்று மழுப்புகிறார். எப்படினாலும் நீ அவர்கிட்ட தானே காசு வாங்கி கொடுப்பாய் அதனால தான் நான் அவருக்கு போன் பண்ணி கேட்டேன் என்று கூற, கடுப்பாகும் வித்யா அங்கே சுத்தி, இங்கே சுத்தி உன் வாழ்க்கையை காப்பாத்த இப்ப என் தலையில் கைய வைக்கிறியா. நான் முருகனிடம் என்னோட பிரண்டு இன்னும் உன்ன மட்டும் தான் அறிமுகம் பண்ணி இருக்கேன். நீ இப்படி காசு கேட்டு தொந்தரவு செஞ்சுக்கிட்டே இருந்தா முருகன் என்ன பத்தி என்ன நினைப்பாரு. உனக்கு உன் வாழ்க்கை முக்கியமா என் வாழ்க்கை எனக்கு முக்கியம்.
நீ உங்க அம்மா குழந்தையை கூட நினைச்சு பாக்காம சுயநலமா வாழ்ந்துட்டு இருக்க என்று கூற கடுப்பாகும் ரோகினி அவரும் பதிலுக்கு திட்டுகிறார். இருவரும் இத்தோடு நம்மோட ஃப்ரெண்ட்ஷிப் முடிஞ்சது என்று கூறுகின்றனர். ரொம்ப சந்தோசம் ஆனா இதுல முருகனுக்கு கொடுக்க வேண்டிய காசு மறந்துடாத என்று வித்யா கூறி கதவை சட்டென்று சார்த்தி விடுகிறார். வித்யா பேசியதை கேட்ட ரோகிணி அதிர்ச்சியில் ரூமில் உட்கார்ந்து அழுது கொண்டு இருக்க, மனோஜ் துளியும் டென்ஷன் ஆகாது என்ன பிரச்சனை எதுக்கு அழுதுட்டு இருக்க என்று கேட்க, நீ ஏதாவது எனக்கு ஹெல்ப் பண்றியா. நான் என்ன ஹெல்ப் பண்ணனும் உனக்கு என்று கேட்க, எப்படியாவது ஒரு லட்சம் பணம் அரேஞ்ச் பண்ணி கொடுக்கிறியா என்று கூறுகிறார். நான் குடுத்துடுவேன் ஆனா கணக்கு வழக்க அப்பா தான் பாக்குறாரு. அவர் மூலமா அம்மாக்கு தெரிஞ்சா நீ இரண்டு லட்சமா கொடுக்கணும் என்று எஸ்டாக கடுப்பேத்துகிறார்.
நீ ஏன் ஸ்ருதி கிட்ட கேக்க கூடாது என்று கூற, நீ தர மாட்ட நான் போய் அங்கே கேட்கணுமா என்று கத்துகிறார். ஆனால் வேறு வழி இன்றி ஸ்ருதியிடம் போய் கேட்கிறார். அதற்கு ஸ்ருதி எதற்கு காசு என்று கேட்கும் போது, நான் மனோஜ் கூட வாழனும்னா இத பண்ணி தான் ஆகணும் என்று சொல்ல ஸ்ருதி இப்போது என்னிடம் காசு இல்லை என்று கூறுகிறாள். இதே இது மீனா கேட்டிருந்தா கொடுத்திருப்பீங்க தானா என்று சொல்ல, மீனா உங்கள மாதிரி பொய் சொல்லி இருக்க மாட்டாங்க. அப்படியே சொல்லியிருந்தாலும் அதை எப்படி வீட்ல சமாளிக்கணும் நகை வாங்கி கொடுத்திருக்க மாட்டாங்க. அந்த நகை திருட்டு நாங்க தெரிஞ்சு காசு கொடுக்கவும் ஒத்து இருக்க மாட்டாங்க என்று அடுத்தடுத்து சொல்லிவிட்டு அது போக முத்து அவரை அந்த நிலைமைக்கு விடமாட்டார் என்று கூறுகிறாள். உங்களுக்கும் உங்க ஹஸ்பண்ட் நால மட்டும்தான் ஹெல்ப் பண்ண முடியும் என்று கூறிவிட்டு செல்கிறார்.