ஜூன் 30 சிறகடிக்க ஆசை எபிசோடு!! மீண்டும் பொய் சொல்லும் ரோகினி!!

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் முத்துவும், செல்வமும் நின்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள். மீனா நீ கோவமாக இருப்பதாக போன் செய்தார் என்று செல்வம் சொல்ல முத்து ஆக்ரோஷமாகி கத்திக் கொண்டிருக்கிறான். அந்த நேரத்தில் அருணின் அம்மா முத்துவை பார்க்க அங்கு வருகிறார். முதலில் பேச மறுத்து விடுகிறார். பின் அவர் அம்மா பேச முயலுகையில் தனியாக பேச வேண்டும் என்று கூற செல்வம் சென்று விடுகிறார்.

என்ன பேசணும் என்று முத்து கேட்க, ஏப்பா என் பையன் ரொம்ப நல்ல பையன் தான்ப்பா. ஏதோ உங்க ரெண்டு பேருக்கு இடையில மிஸ் அன்டர்ஸ்ட் டேண்டிங் அதிகமாக இருக்கறதுனால என் பையனா நீங்க வேணான்னு நினைக்கிறீங்க.

சீதா வீட்டிலும் உங்க பேச்சை மீறி கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன்னு சொல்றாங்க. அவங்க ரெண்டு பேரும் மனதளவில் ரொம்ப கஷ்டப்படுறாங்க. கொஞ்சம் யோசிங்க பா என்று கூறுகிறார். சீதா என் வீட்டுக்கு வந்தா நான் நல்லா அவளை பாத்துக்குவேன். என் மகனும் நல்லா பாத்துக்குவான். இதே இது இந்த இடத்துல சீதாவோட அப்பா இருந்திருந்தா நிச்சயமாக கல்யாணம் பண்ணி வச்சிருப்பாரு என்று சொல்ல அதெல்லாம் முடியாதுமா என்று சொல்லி அனுப்பி வைத்து விடுகிறார்.

அவர் சென்ற பிறகு செல்வம் வந்து, இவ்வளவு பிரச்சினையாகும்போது நீ அந்த பொண்ணு அவருக்கே கல்யாணம் பண்ணி வைக்கிறதுதான் நல்லது. அந்த பொண்ணு ஒன்னும் மத்தவங்கள மாதிரி ஓடிப் போய் கல்யாணம் பண்ணிட்டு வரல. உன் சம்மதம் கேட்டு வெயிட் பண்ணிட்டு இருக்காள். அதற்காகவாவது நீ கல்யாணம் பண்ணி வைக்கணும் என்று சொல்ல முத்து அமைதியாக நிற்கிறார்.

அந்நேரத்தில், முத்து காப்பாற்றிய பெண் குடும்பத்தார் அங்கு வர, முத்துவிடம் தம்பி நீங்க காப்பாத்துன பிறகு தான் நாங்க இந்த தம்பியை பத்தி கேட்டு தெரிஞ்சுக்கிட்டோம். ரொம்ப நல்ல பையன். இப்போ இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சுட்டோம் என்று சொல்லிவிட்டு முத்துவின் காரிலேயே வீடு திரும்பினர். வர வழியில திருமண தம்பதி சந்தோசமாக பேசிக்கொண்டு வருகின்றனர்.

இதைப் பார்த்து முத்து லேசாக மனம் மாறுவது போல் தோன்றுகிறது. மற்றொருபுறம் ரோகினி வந்த ஆன்ட்டி இந்தாங்க என்று ஒரு லட்ச ரூபாயை கொடுக்க, இது என்ன கள்ள நோட்டா? எங்கிருந்து திருடிட்டு வந்த என்று கேட்க, எனக்கு கள்ள நோட்டு அடிக்கிறவங்க எல்லாம் தெரியாது ஆன்ட்டி என்று கோவமாக கூறுகிறாள். அடுத்த நிமிடம் நீ போலி நகை கொடுத்ததற்காக இந்த காசு கிடையாது. நீ என்னை அவமானப்படுத்தியதற்காக தான் என்று கூறி அந்த பணத்தை எடுத்து செல்கிறாள்.

உடனே ரோகினி ரூமிற்கு ஓடிவந்து கதவை சாற்றி அழுது கொண்டிருக்கிறாள். அப்பொழுது மனோஜ் இந்த பணம் எங்கிருந்து கொண்டு வந்தாய் என்று கேட்க, வித்யாவிடம் இருந்து வாங்கி வந்ததாக பொய் சொல்கிறார். வித்யாவிடம் சண்டை என்று சொன்னியே? என்று கேட்க, நாங்க சமாதானம் ஆயிட்டோம் என்று கூறுகிறார்.

இதெல்லாம் நம்பற மாதிரி இல்ல என்று மனோஜ் கூறுகையில் விரக்தியில் கத்தி அழுது கொண்டிருக்கிறார். இன்னொரு புறம் சீதாவிடம் மீனா நீ அவரை மனசுல வச்சுட்டு தான் மாப்பிள்ளை பார்க்க சொன்னேன் சொன்னதையே உங்க மாமா நால ஏத்துக்க முடியல. நான் என்னன்னா உன்னைய கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணி வச்சிருக்கேன். இது தெரிஞ்சா என்ன செய்யப் போகிறாரோ என்று இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram