எபிசோடில் தொடக்கத்தில் அந்த பெண்ணை முத்து, சீதா அட்மிட் ஆயிருக்கும் அதே ஹாஸ்பிடலில் சேர்க்கிறார். சிறிது நேரத்தில் அங்கு அந்தப் பெண்ணின் அண்ணன் வந்து சேர்கிறார். அவரை கண்டதும் அவளுடைய அம்மா, அவ ஆசைப்பட்டவளை விட அவளை சேர்த்து வச்சிருங்க டா! அவ இப்படி எல்லாம் செஞ்சா தான் உங்க மனசு மாறுமா! ஏ புள்ள இப்படி சாக கிடக்கிறாளே! என்று கத்தி கூச்சல் இடுகிறாள். வாய் அடைத்து போய் நின்ற முத்து அங்கிருந்து நான் போயிட்டு வரேன் அம்மா என்று சொல்லி கிளம்ப பாக்கிறார். அவரை வழிமறைத்த அந்த உதவி கேட்ட அம்மா, எப்ப தம்பி நீங்களே சொல்லுங்கப்பா அவ காதலிச்ச பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்க சொல்லுங்கப்பா என்று அழுது கொண்டே கேட்க, கொஞ்சமும் வாய் திறக்காது அமைதி காக்கிறார். மீனா அவர்கிட்ட எடுத்து சொல்லுங்க என்று சொல்ல, அடுத்தவங்க குடும்ப பிரச்சினைகளை தலையிடக்கூடாது என்று சொல்லிவிட்டு புறப்படுகிறார். சீதாவும் நான் அப்படியெல்லாம் பண்ண மாட்டேன் மாமா கவலைப்படாதீங்க என்று கூறுகிறாள். மற்றொருபுறம் விஜயா, பார்வதியுடன் ரவி ரெஸ்டாரண்டுக்கு நீத்துவை மனோஜ்க்கு பெண் பார்க்க செல்கிறார். நீத்து விஜயாவை பார்த்து வாங்க ஆன்ட்டி ரவி வெளியே போயிருக்காரு. சாப்பிட வந்திருக்கீங்களா என்று கேட்கிறாள். இல்லம்மா உன்ன பாக்க தான் வந்தேன் என்று கூறி நைசாக கல்யாண பேச்சை ஆரம்பிக்கிறார். இப்போதைக்கு அதுல ஆசையில்ல ஆன்ட்டி என்று கூறி விடுகிறாள்.
விஜயா அதையும் தாண்டி எனக்கு தெரிஞ்ச ஒரு பையன் இருக்கான் ரொம்ப அழகா இருப்பான் என்று அடுக்க, நீத்தூ நான் உங்க பையன் மாதிரி ஒருத்தர் தான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று படக்கென்று கூறுகிறாள். விஜயா மனோஜ் நினைச்சு சந்தோஷப்பட, அவளுடனே ரவி மாதிரி தான் மாப்பிள்ளை வேணும் என்கிறாள். அதிர்ச்சியில் உறைந்து போகிறாள் விஜயா. பார்வதி உடனே விஜயாவை பார்த்து உன் மருமகளை உஷாரா இருக்க சொல்லு என்று கூறுகிறாள். அடுத்து சந்திராவும், சத்யாவும் முத்துவை பார்க்க கார் செட்டிற்கு வருகிறார்கள். அவர்கள் எவ்வளவு கேட்டும் முத்து அருண் நல்லவன் இல்ல. என்னோட எதிரிங்கறதுனால சொல்லல. அதை நல்லவனா இருந்தா நானே கல்யாணம் பண்ணி வச்சிருவேன் என்று சொல்லிவிட ஏமாற்றத்துடன் திரும்புகிறார்கள். மற்றொருபுறம் விஜயா ஸ்ருதியிடம் நடந்ததை எடுத்துக் கூறி, ரெஸ்டாரண்டுக்கு ரவி போக வேணாம் என்று சொல்லு என்கிறாள். அதை நீங்களே சொல்லுங்க நான் சொன்னா கேட்க மாட்டேன் என்று ரவியை கூட்டிக்கொண்டு வருகிறார். விஜயா எடுத்துச் சொல்ல, ரவி ஸ்ருதி சொல்லி தான் அம்மா இப்படி பேசுறாங்க என்று ஸ்ருதி மேல் அனாவசியமாக கோபத்தை காட்டுகிறான். இன்னொரு புறம் முத்து மீனாவிடம் உங்க அம்மாவை சீதா கல்யாணத்தை பத்தி பேச அனுப்பிச்சியா என்று கேட்க மீனா எனக்கு அத பத்தி எதுவும் தெரியாது என்று கூறுகிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.