சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில், ரகுமான் இசையில் வெளிவந்த படம் தான் தக் லைஃப். இந்த பட படப்பிடிப்பு முதல் தற்பொழுது வரை பெரும் பேசும் பொருளாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த படம் ரிலீஸ் ஆகி இருந்த நிலையில் சின்மயி பாடி இருந்த முத்தமழை பாடல் அந்தப் படத்தில் இடம்பெறவில்லை. ஏன் சின்மயி அந்த பாடலை பாடவில்லை என்று கூறுகின்றனர். இந்தப் பாடலை சின்மயி மற்றும் தீ ஆகிய இருவருமே தனித்தனியாக பாடியுள்ளனர். இதில் யார் குரலில் இந்த பாடல் படத்தில் இடம் பெற்றுள்ளது என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் இருந்து வந்துள்ளனர்.
இதனால் பெரிய எதிர்பார்ப்புடன் இந்த படத்தை பார்க்க சென்ற ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்ததாக பரவலாக பேசப்படுகின்றது. அதைத்தொடர்ந்து இந்த பாடலும் அதில் இடம்பெறவில்லை. இதனால் சமூக வலைதளங்களில் ஜஸ்டிஸ் பார் ரஹ்மான் என்ற ஹேஷ்டேக் பரவி இருந்தது. இந்நிலையில் பாடகர் ஜேம்ஸ் வசந்த் இது குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியது பின்வருமாறு, நான் இந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை.
ஜஸ்டிஸ் ஃபார் ரகுமான் என்ற ஹேஸ்டைக்கை பார்த்து, ரகுமானிடம் மெசேஜ் செய்து இருந்தேன். அதற்கு அவர் சில விஷயங்கள் எல்லாம் அப்படித்தான்! படமா பாடலா என்று பார்த்தால் படத்திற்கு தானே முக்கியத்துவம் வழங்குவார்கள் என்றபடி ரிப்ளை செய்திருந்தார். அவரும் இயக்குனர் மணியும் நீண்ட கால நண்பர்கள். அவர் கூறியிருந்தால் நிச்சயம் இயக்குனர் பாடலை படத்தில் வைத்து இருந்திருப்பார். ஆனால், ரகுமான் இவ்வாறு கூறியிருப்பதை வைத்து பார்த்தால், மணிரத்தினம் சற்று சறுக்கல் அடைந்துள்ளார். எல்லோருக்கும் சறுக்கல் வரம் தானே என்று பதிவிட்டுள்ளார். ரசிகர்களாக இந்த படம் பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது என்று கூறியுள்ளார்.