அண்ணியின் மீது ஆசை கொண்ட கொழுந்தன்!! அண்ணன் கொடுத்த ட்விஸ்ட்?? புதுக்கோட்டையில் பரபரப்பு!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புள்ளான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். இவருக்கு முருகேசன், பாஸ்கரன் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். மூத்த மகன் முருகேசன் திருமணமாகி விமலா இராணி என்ற பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தார். அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். வேலைக்காக முருகேசன் மாலத்தீவில் பணிபுரிந்து வந்தார்.

இவரது தம்பி பாஸ்கரன் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் அந்த திருமணத்தை ஏற்கவில்லை. இதனால் பாஸ்கரனின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றார். தன் ஐந்து வயது மகனைப் பராமரித்துக் கொண்டே பாஸ்கரன் பெற்றோர் வீட்டின் மேல்மாடியில் தனியாக வசித்து வந்தார். அதே வீட்டின் கீழ் மாமனார், மாமியாருடன் விமலா இராணியும் தன் குழந்தைகளுடன் இருந்தார். பாஸ்கரனின் மகனையும் விமலா இராணி தான் பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் பாஸ்கரனுக்கும் அவரது அண்ணியான விமலா இராணிக்கும் இடையே திருமண நெறிகளை மீறும் உறவு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை அறிந்த பெற்றோர் பாஸ்கரனை கண்டித்துள்ளனர். அதைத் தாங்க முடியாமல் பாஸ்கரன் தனது பெற்றோரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் வெளிநாட்டில் இருந்த முருகேசனுக்குத் தெரிய வந்ததும், மனைவியிடம் விசாரித்தார். அதற்கு விமலா இராணி, பாஸ்கரன் தான் வலுக்கட்டாயமாக தன்னை தவறான உறவில் ஈடுபடுத்தியதாக கூறியுள்ளார். இதனால் கொந்தளித்த முருகேசன், மனைவியையும் குழந்தைகளையும் உடனே பெற்றோர் வீட்டிலிருந்து விலகிச் செல்லச் சொன்னார். இந்த கோபத்தில் முருகேசன் யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் வீட்டுக்கு வந்து, தூங்கிக் கொண்டிருந்த தம்பி பாஸ்கரனை கொடூரமாகக் கொலை செய்தார் என்று போலீசார் கூறுகின்றனர். பின்னர் தந்தை வீரப்பன், தாய் வசந்தா ஆகியோருடன் சேர்ந்து சடலத்தை வீட்டின் அருகே சாலையில் விபத்து நடந்தது போல வைக்க ஏற்பாடு செய்துள்ளார் என விசாரணையில் தெரிந்துள்ளது.

வீட்டில் ஏற்பட்ட ரத்தக் கறைகளை தாயாரைக் கொண்டு கழுவச் செய்து விட்டு, மீண்டும் வெளிநாட்டுக்குச் சென்றவர் முருகேசன். மறுநாள் இரவு தம்பியின் மரணம் நடந்ததை அறியாமல் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தவர் போல நாடகமாடியுள்ளார். இறுதியில், போலீசாரின் தீவிர விசாரணையில் உண்மை வெளியில் வந்தது. சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்போது கொலை வழக்காக மாறி, வீரப்பன், வசந்தா, முருகேசன் மற்றும் விமலா இராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram