பாஸ்போர்ட் டாக்குமெண்ட்ஸில் ஆணாதிக்க முறை!! சென்னை ஐகோர்ட் பிறப்பித்த தடை!!

ரேவதி என்கிற பெண்மணி சென்னையைச் சேர்ந்தவர். அவர் அவருடைய கணவருடன் விவாகரத்து கோரி வழக்கு பதிவு செய்து அது நிலுவையில் உள்ளது. இந்நிலையில் அவர் பாஸ்போர்ட் பெறுவதற்காக அப்ளை செய்து உள்ளார். அதற்காக கணவரின் ஒப்புதல் கையொப்பம் வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். தமக்கு விவாகரத்து நடக்க போவதாகவும், தான் தன் கணவருடன் இல்லை என்றும் எடுத்துரைத்துள்ளார். இருப்பினும் கல்யாணம் ஆகிய காரணத்தால் கணவர் ஒப்புதல் கண்டிப்பாக வேண்டும் என்று பாஸ்போர்ட் அதிகாரிகள் பாஸ்போர்ட் தர மறுத்து விட்டனர். விவாகரத்து கோரியதால் கணவரிடம் பாஸ்போர்ட்டிற்காக அனுமதி கையெழுத்து பெற முடியாது.

இதனைத் தொடர்ந்து ரேவதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த், மனைவி பாஸ்போர்ட் பெறுவதற்கு கணவரின் கையெழுத்து தேவை இல்லை. இது முற்றிலும் ஆணாதிக்க தன்மையை காட்டுகின்றது. 18 வயது பூர்த்தி ஆன பெண் தன்னிச்சையாக முடிவெடுக்க அவர்களுக்கு உரிமை உண்டு. கணவரின் கையெழுத்து இருந்தால் தான் பாஸ்போர்ட் வழங்க முடியும் என்பது அது ஒரு உடமையாக கருதப்படுகிறது. பெண்கள் ஒரு உடமைகள் அல்ல. திருமணம் ஆகிய பெண்கள் தங்களுக்குரிய அடையாளத்தை இழக்க முடியாது. இவர் கூறிய பாஸ்போர்ட்டிற்கான செயல்முறையை நான்கு வாரத்திற்குள் முடித்தாக வேண்டும் என்று பாஸ்போர்ட் அதிகாரிகளுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பாஸ்போர்ட் என்பது இந்திய குடிமக்களின் தேவைப்படுபவர்களுக்கு ஒரு உரிமை. அது இது போன்ற காரணத்துக்காக தடை விதிக்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram