கோவை: நிறுவன மேம்பாட்டு திட்டம் மற்றும் புதிய தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்க 20 நிறுவனங்களுக்கு மானியத்துடன் கடன் வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று கோவை மாவட்ட தொழில் மையம் மேலாளர் சண்முக சிவா கூறியுள்ளார். வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் UYEGP தொழில் தொடங்க மானியத்துடன் கடன் வழங்க உள்ளது என்றும் கூறியுள்ளார்.
தமிழக அரசு மட்டுமல்லாமல், மத்திய அரசின் சிறு தொழிலாளர் தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் கடன் உதவிகளை செய்து வருகிறது. நிறுவன மேம்பாட்டு திட்டம் மற்றும் புதிய தொழில் முனைவோர் என தொழில் தொடங்க 20 நிறுவனங்களுக்கு ஒரு கோடியே 78 லட்சம் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கோவை மாவட்ட தொழில் மைய மேலாளர் சண்முக சிவா வெளியிட்டுள்ளார்.
அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தின் கீழ் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் தொழில் தொடங்க ரூ 3 கோடியே 83 லட்சம் மதிப்பில் மானியத்துடன் கடன் வழங்க 46 நிறுவனங்களுக்கு மானியத்துடன் கடன் வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் தொழில் தொடங்க ரூ 69 லட்சம் மானிய கடன் வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கைவினை கலைஞர்களுக்கு தொழில் புரிய 36 பேருக்கு ஒரு கோடியே 26 லட்சம் மானியத்துடன் கடன் வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்க கடந்த 4 ஆண்டுகளில் 17 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டுகளில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.58 கோடியே 63 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. உணவு பதப்படுத்துதல் குறு நிறுவனங்களை முறைப்படுத்த 164 நிறுவனங்களுக்கு 3 கோடியே 72 லட்சம் கடன் வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 11 கோடி ரூபாய் கோவை மாவட்டத்தில் உள்ள தொழில் முனைவோருக்கு மானியத்துடன் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கோவை மாவட்டத்தில் 2021 முதல் 2024 வரை புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மொத்தம் 21 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.