நடப்பாச்சியின் போன தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட திட்டம் தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம். 2021 ஆம் ஆண்டு தேர்தல் முடிந்து ஆட்சி அமைத்த பின்னர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 2023 செப்டம்பர் மாதம் முதல் தான் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இதில் பல கட்ட மகளிர்களின் தளர்வு தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஏதேனும் ஓய்வூதியம் பெற்றிருப்பவர்களுக்கு, கார், ஜீப் போன்ற கனரக வாகனங்கள் வைத்திருப்போருக்கு, அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, வங்கி ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோரின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, நிராகரிக்கப்பட்டு இருந்தது. இதனால் பலர் அதிருப்தி அடைந்திருந்தனர். இதில் அடங்கிய பல பெண்கள் அதாவது தமிழ்நாட்டில் இதுவரை 1.06 கோடி பெண்களுக்கு இதுவரை மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் தமிழக அரசின் இந்த திட்டத்தினால் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களில் மறு விண்ணப்பம் அளித்தவர்களுக்கு, மறுபரிசலனை செய்யப்பட்டு கூடுதலாக 90 ஆயிரம் பேர் மகளிர் உரிமைத் தொகையில் இணைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இந்த மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான தகுதியில் தளர்வு அறிவித்துள்ளது தமிழக அரசு. அடுத்த சட்டமன்றத் தேர்தல் வருவதை ஒட்டி இதற்கான தீவிர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதில் இனிமேல் கனரக வாகனம் வைத்திருப்பவர்களும், ஓய்வு ஊதியம் பெறும் வீட்டாரின் மற்ற பெண்கள் இதற்கு அப்ளை செய்தாலும், முதியோர் ஓய்வூதியம் பெறும் நபர்களும், முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் நலன் பெறுபவர்களும், ஒரு குறிப்பிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் நல ஊதிய திட்டம் பெறுபவர்களும், மாற்றுத்திறனாளி குடும்பப் பெண்களும், இந்திரா காந்தி தேசிய ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றில் பயன்பெறுபவர்களும் தற்போது விண்ணப்பிப்பாராயின் அவர்களுக்கும் மகளை உரிமை தொகை வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யவும், புதிய விண்ணப்பங்களை பெறுவதற்கும் தனியாக ஒரு தன்னார்வாளர் குழுவை நியமிக்கவும் இந்த திட்டம் குறித்து அவர்கள் செயல்படுத்தவும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. மிக விரைவில் களப்பணியில் இதற்கான வேலைகள் தீவிரமாக நடக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.