சென்னை: சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை மாளவிகா மோகனன், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தென்னிந்திய நடிகைகளின் நடிப்புத் திறன் குறித்துப் பேசியுள்ள கருத்துக்கள் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.
எண்களைச் சொல்லி அழுகிறார்கள்: “தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் சில நடிகைகள் சோகமான காட்சிகளில் நடிக்கும்போது உண்மையிலேயே அந்த உணர்வை வெளிப்படுத்துவதில்லை. மாறாக, மனதிற்குள் 1, 2, 3, 4 என எண்ணிக்கொண்டே சோகமான முகபாவனையைக் காட்டுகிறார்கள்.”
A, B, C, D கோபம்: “அதேபோல் கோபப்பட வேண்டிய காட்சிகளில் A, B, C, D என எழுத்துக்களைச் சொல்லிக்கொண்டு நடிக்கிறார்கள். அவர்களின் கவனம் எல்லாம் உதட்டசைவு சரியாக இருக்க வேண்டும் என்பதில் மட்டும்தான் இருக்கிறது.”
டப்பிங் மேஜிக்: “இப்படி உணர்வே இல்லாமல் நடித்துவிட்டு, பின்னாளில் டப்பிங் பேசும்போது அந்த ஓட்டைகளைச் சரிசெய்து கொள்கிறார்கள். ஒரு படத்தில் மட்டுமல்ல, தங்கள் மொத்த கேரியரையே இப்படித்தான் ஓட்டுகிறார்கள்” என அதிரடியாகப் பேசியுள்ளார்.
யாரைச் சொல்கிறார் மாளவிகா? யாரையும் வெளிப்படையாகப் பெயர் குறிப்பிடவில்லை என்றாலும், மாளவிகாவின் இந்த விமர்சனம் முன்னணி நடிகைகளை நோக்கித்தான் வீசப்பட்டுள்ளது என நெட்டிசன்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கு முன்னால் நயன்தாரா குறித்தும் மாளவிகா பேசிய சில கருத்துக்கள் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் மோதல்: “உங்களுக்கு நடிப்பு வராததால் மற்றவர்களைக் குறை சொல்கிறீர்களா?” எனச் சில ரசிகர்களும், “அவர் சொல்வதில் உண்மையும் இருக்கிறது” என மாளவிகாவுக்கு ஆதரவாகச் சிலரும் சமூக வலைதளங்களில் மோதி வருகின்றனர்.


