டெஹ்ரான்: இஸ்ரேலுக்கு பாதுகாப்பாக இருப்பது”அயன் டோம்” எனப்படும் வான்வெளி பாதுகாப்பு அம்சம் ஆகும். அயன் டோமை உருவாக்கிய ரஃபேல் நிறுவனத்தை நேற்றிரவு ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிய ஆயுதக் கிடங்கை குறி வைத்து தாக்கப்பட்டது.இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உள்ள ஆயுத கிடங்கு, எண்ணெய் கிடங்குகள் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது ஈரான்.
நேற்று இரவு 2 மணி நேரம் நடத்திய தாக்குதலில் 50 ஏவுகணைகள் மற்றும் ஹைஃபா மீது 20 ஏவுகணைகளும் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இருப்பினும் இந்த ஏவுகணைகள் அனைத்தும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் வகையை சேர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும், இதனை தடுப்பதற்கு இஸ்ரேலுக்கு வாய்ப்புகள் குறைந்த அளவே இருந்தது. ஏவுகணைகளை தடுத்த போதிலும் ஒரு சில ஏவுகணைகள் இலக்கை தாக்கி அழித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் ஷஹாப்-3 மற்றும் சோல்ஃபாகர் ரக பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஒலியை விட ஐந்து மடங்கு அதிகமாக பயணிப்பதால் இஸ்ரேலுக்கு ஏவுகணைகளை தடுப்பது கடினமாக இருந்தது. இந்நிலையில் தாக்குதல் போது உயிரிழப்புகள் நேர்ந்திருக்கலாம் என்ற அச்சம் ஒருபுறம் இருக்கிறது. மேலும், இஸ்ரேல் பெருமையாக பேசி வந்த “அயன் டோம்” பாதுகாப்பு அம்சம் இப்போது தாக்கப்பட்டு இருப்பது இஸ்ரேலை உலுக்கி வருகிறது. ஆனால் இஸ்ரேல் எண்ணெய் கிடங்குகளை மட்டும் தான் தாக்கியுள்ளது.
ரஃபேல் நிறுவனத்தை தாக்கவில்லை என்று மறுத்துள்ளது. “அயன் டோம்” என்ற அமைப்பு காஸா மற்றும் லெபனில் இருந்து ஒரு ராக்கெட்டுகளை தடுக்கும் வகையில் இஸ்ரேலுக்கு இருந்தது. குறுகிய தூரத்திலிருந்து வரும் பாக்கெட்டுகளை எதிர்கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. காஸா மற்றும் கிராட் ரக ராக்கெட்டுகள் 4 முதல் 70 கிலோமீட்டர் வரை செல்லும் ராக்கெட்டுகளை இடைமறித்து தாக்கும் திறன் கொண்டது.
2011 ல் தான் ரஃபேல் அட்வான்ஸ் டிபன்ஸ் சிஸ்டம் உருவாக்கப்பட்டது. தமீர் ஏவுகணையும் சுமார் 43 லட்சம் வரை இருக்கும் என்றும், அதை பயன்படுத்துவது கொஞ்சம் காஸ்ட்லியாக இருந்தாலும் நல்ல பயனைத் தரும் என்று கூறியுள்ளார்கள் நிபுணர்கள். ரஃபேல் நிறுவனத்தை ஈரான் ஏவுகணைகளை கொண்டு தாக்கியது குறிப்பிடத்தக்கது.





